மார்கழி மாதம் நான்காம் நாளான இன்று திருவெம்பாவையின் ”ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?” என்று தொடங்குகின்ற நான்காவது பனுவலை காண இருக்கிறோம்.
விண்ணுலகம் போற்றும் அருமருந்தை வேதத்தால் மேன்மையாக உணரப்படும் பரம்பொருளை காண, இனியவரான ஈசனை நெக்குருகி கசிந்து பாட நம்மை மாணிக்கவாசகர் அழைக்கிறார்.
மார்கழியில் நாமும் திருவெம்பாவை பாடல்களைப் பாடி ஈசன் அருள் பெறுவோம்!