”கோழி சிலம்பச்சிலம்பும் குருகெங்கும்” என்று தொடங்கும் திருவெம்பாவையின் 8ம் பாடலை காண இருக்கிறோம்.
கோழி கூவ, மற்ற பறவைகளும் ஓசையை எழுப்ப, வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, வெண்மையான சங்கு முழங்க, ஒப்பற்ற கருணையுடைய, நிகரில்லாத உயர்ந்த சிவனுடைய புகழை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? இது என்ன தூக்கமோ? எழுந்துவா பிரளயத்தின் கடைசியில் தலைவனாய் நின்ற சிவனின் அருளை பாடுவோம்! என்று சிவனை நினைந்து உருகி பாட அழைக்கிறார் மாணிக்க வாசகர்.