மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவையின் 12வது பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம்.
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும் என்று தொடங்கும் இந்த திருவெம்பாவை பாடலில் மாணிக்கவாசகர் பிறவித் துன்பம் கெடுவதற்காக நாம் விரும்பி வழிபடும் தீர்த்தன், தில்லைச் சிற்றம்பலத்தில் தீயேந்தி ஆடுகின்ற கூத்தபிரான், அவன் புகழை பேசியும், பாடியும் பூக்கள் நிறைந்த இக்குளத்தில் நீராடுங்கள் என்று மார்கழி நீராடலுக்கு அழைக்கிறார்.
இந்த மார்கழி தினத்தில் நாமும் இந்தப் பாடலில் முழுவிளக்கதையும் கேட்டு அறிந்து திருவெம்பாவையை பாடி ஈசனை தொழுவோம்!