வெட்டப்பட்ட இலங்கை அதிபரின் சகோதரர் பிரியந்த சிறீசேன மரணம்

Published:

priyantha-sirisenaகோடாலியால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடி சிகிச்சை பெற்று வந்த இலங்கை அதிபர் மைதரீபால சிறீசேனவின் சகோதரர் பிரியந்த சிறீசேன இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கையின் பொலன்னறுவ பகுதியில் ஒரு நபரால் கோடாலியால் வெட்டப்பட்டார் பிரியந்த சிறிசேன. படுகாயமடைந்த அவர் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன தற்போது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இலங்கைக்கு நாளைதான் திரும்புகிறார். இதனால் நாளை மறுநாள் பொலன்னறுவவில் பிரியந்த சிறீசேனவின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரியந்த சிறீசேனவைத் தாக்கிவிட்டு, பின்னர் சரணடைந்த நபரை ஏப்ரல் 8-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img