உலகக் கோப்பை இறுதிப் போட்டியை வெல்வதற்கு இரண்டே இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் என்று ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் தனது சகாக்களுக்கு கூறியுள்ளார். இதனை அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். நாளைய போட்டி சிறப்பான போட்டியாக இருக்கும். இதில் சந்தேகம் இல்லை. ஆனால், அது அணி சார்ந்ததாக இருக்க வேண்டும். அதைத்தான் நானும் விரும்புகிறேன். இந்தப் போட்டி குறித்து அணி வீரர்களிடம் பேசினேன். அப்போது உணர்ச்சி வசப்பட வேண்டாம். திறமையுடன் விளையாட வேண்டும். இது இரண்டும் முக்கியமான போட்டி மற்றும் தொடரை வெல்வதற்கு முக்கியக் காரணிகளாக இருக்கும் என்று வலியுறுத்தினேன். ஆகவே, நாளைய போட்டியில் எந்த வித்தியாசமும் இருக்காது. மெல்போர்ன் மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவது ஒவ்வொரு வீரர்களுக்கும் அற்புதமான தருணம். எனக்கு இது கடைசி போட்டி என்பதால் இன்னும் சிறப்பானது என்றார் அவர்.
போட்டியை வெல்ல இரண்டில் கவனம் செலுத்துங்கள்: கிளார்க் அறிவுரை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

