எங்களுக்கு ஆதரவு தாருங்கள்: இந்திய ரசிகர்களுக்கு நியூஸி. கேப்டன் கடிதம்

Published:

இறுதிப் போட்டியில் முதல்முறையாக ஆட வுள்ள எங்களுக்கு உங்களின் ஆதரவினைத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்கலம். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நாளை நியூசிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா மோதுகிறது. இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு உங்களது ஆதரவைத் தெரிவியுங்கள் என்று ஒரு திறந்த மடலை எழுதியுள்ளார் நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம். இந்திய ரசிகர்களுக்கு, பூமா நிறுவனம் வாயிலாக ஒரு கடிதம் எழுதியுள்ளார் மெக்கலம். அதில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய ரசிகர்களின் ஆதரவு நியூசிலாந்துக்குதான் கிடைக்கப்போகிறது என்பது தெரிகிறது. இந்திய ரசிகர்களிடம் நியூசிலாந்து வீரர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். உங்களது ஆதரவை ஒவ்வொரு பந்துக்கும் காட்டுங்கள். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தாகம், எப்படிப்பட்டது என்பதை உணர்ந்தவர்கள் இந்திய ரசிகர்கள். எங்கள் கிரிக்கெட் அணிக்கு, இது மிகப்பெரிய தருணம். இந்த நேரத்தில், உங்களது ஆதரவை நாங்கள் கேட்கிறோம். உங்களது ஆரவாரம் எங்களுக்கு தேவை என்று மெக்கல்லம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ:  FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img