ஏர் கனடா விமானம் ஓடுபாதையில் விபத்து: 25 பேர் காயம்

Published:

air-canada நோவா ஸ்காட்டியா: ஏர் கனடா விமானம் ஒன்று கனடா நாட்டில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 25 பேருக்கு காயம் ஏற்பட்டது. கனடாவின் நோவா ஸ்காட்டியாவின் ஹாலிபேக்ஸ் விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. ஏர் கனடாவிற்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ 320 விமானம் ஒன்று, 132 பயணிகளுடன் மோசமான வானிலை காரணமாக நீண்ட நேரம் தரையிறங்க முடியாமல் வானில் பறந்தபடியே இருந்தது. பின்னர், விமானம் தரையிறங்கிய போது விமானியால் ஓடுபாதையை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. இதனால் விமானம் ஓடுபாதையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 25 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் விமானம் மோதியதால் விமான நிலையத்தின் மின்சார இணைப்புகள் பாதிக்கப்பட்டன. இதனால், ஒட்டுமொத்த விமான நிலையமும் இருளில் முழ்கியது.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img