சுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்!

whale - 2026

சுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தாக மாறிய ஒரு சுறா மீனுக்கு பின்னர், அதிகாரிகள் முடிவு கட்டினர்!

மடகாஸ்கருக்கு 500 மைல் தொலைவில் உள்ள ரீயூனியன் தீவுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். ஆனால் அங்கு கடற்கரைகளில் சுறா மீன்கள் சுற்றி வருவதால் பயணிகள் நீச்சலடிக்க செல்ல தயங்கினார்கள்.

இதனால் அதிகாரிகள் மனிதர்களைத் தாக்கும் அபாயகரமான அந்த சுறா மீனைக் கொன்றார்கள். இன்னும் ஐந்து சுறா மீன்களைக் கூட தாம் தீவில் பார்த்ததாக அவர்கள் தெரிவித்தார்கள்.

அது அப்படி இருக்க… இறந்த சுறா மீனின் உடலை அறுத்த போது சுறா மீனின் வயிற்றில் ஒரு மனிதக் கையைக் கண்டார்கள். மோதிரம் அணிந்திருந்த அந்தக் கையைப் பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

சென்ற சனிக்கிழமை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி பீச்சில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனதால் இந்த கை அவருடையதாக இருக்கும் என்று அதிகாரிகள் சந்தேகித்தனர்.

கை விரலில் இருந்த மோதிரம் தன் கணவருடையதே என்று காணாமல் போனவரின் மனைவி கூறியதால் காணாமல் போன மனிதர் இறந்ததாக அதிகாரிகள் முடிவு செய்தனர்.

மரணித்தவர் தன் மனைவியுடன் பீச்சுக்கு வந்திருந்தார் என்றும் சனிக்கிழமை மதியம் நீரில் இறங்கியவரை பின்னர் காணவில்லை என்றும் மனைவி புகார் அளிக்கவே அதிகாரிகள் கடற்கரை முழுவதும் தேடியும் பலனில்லாமல் போனது.

தற்போது சுறா மீனின் வயிற்றில் கை கிடைத்துள்ளதால் அவர் நீரில் மூழ்கி இறந்ததாக முடிவு கட்டினர். ஆனால் சுறா மீன் அவரைக் கொன்றதா அல்லது அவர் நீரில் மூழ்கி இறந்த பின் சுறாமீன் தின்றதா என்பது போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்த பின் தான் தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories