கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது பற்றி ஒலிம்பிக் கமிட்டி ஆலோசிக்க முடிவு எடுத்துள்ளது.
ஒன்று அல்லது 2 ஆண்டுகள், ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு ஜூலையில், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்தன.
வீரர்களின் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி போட்டிகளை ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதற்கு முன்னதாக, முதலாம் உலகப்போரின் போது, ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. ஒலிம்பிக் போட்டிகள் ரத்தானால், ஜப்பான் மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும்