ஊழல் வழக்கில் ராஜபட்சவின் தம்பியைத் தேடுகிறது போலீஸ்: அமெரிக்காவிலிருந்தும் தப்பிவிட்டாராம்!

ராஜபட்ச தலைமையிலான முந்தைய ஆட்சியில் இலங்கை பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அவரது தம்பியும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபட்சவை போலீசார் தேடி வருகின்றனர். இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபட்சவும், அவரது தம்பிகளும் பதவியை பயன்படுத்தி செய்த குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கியுள்ளன. மேலும், அவர் குடும்பத்தினர் மீது பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. எனவே, அவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படுவர் என்று கூறப்பட்டது. இதனால், ராஜபட்சயின் தம்பிகள் கோத்தபய, மற்றும் பசில் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். பசில் ராஜபட்ச கடந்த 11ஆம் தேதி தனது மனைவியுடன் அமெரிக்கா சென்று விட்டார். பின்னர் முதல் வேலையாக, சுதந்திரா கட்சி தேசிய அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். இதையடுத்து, பசில் ராஜபட்ச சட்ட விரோதமான முறையில் நாட்டில் இருந்து தப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடையதாக தலைமை ஆலோசகராக இருந்த பசில் ராஜபட்ச மீது ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க பசில் ராஜபட்சவை இலங்கை போலீசார் தேடிவருவதாக அந்நாட்டின் போலீஸ் உதவி சூப்பிரண்ட் ருவான் குணசேகரா கூறியுள்ளார். இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற பசில், தற்போது அமெரிக்காவில் இல்லை என்றும், வியட்நாமுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories