December 6, 2025, 8:51 AM
23.8 C
Chennai

தான் மட்டுமல்ல வீடும் மனைவி விருப்பப்படி சுழலுமாறு வடிவமைத்த காதல் கணவன்!

house
house

காதல் என்பது காலத்திற்குள் அடங்குவதும் இல்லை, நூற்றாண்டுகள் கடந்தாலும், மனிதர்கள் இறந்தாலும், வீழ்ந்தாலும், மாண்டாலும், வாழ்ந்தாலும் காதல் மட்டும் என்றும் என்றென்றும் உலகில் நிலைத்து வாழ்கிறது.

வடக்கு போஸ்னியாவில் ஒரு காதலன் தனது மனைவிக்காக சுழலும் வீடு ஒன்றை கட்டி பரிசளித்திருக்கிறார். இவர் தனது மனைவியுடன் இந்த காதல் சின்னத்தில் வாழ்ந்து வருகிறார். காதல் சுற்றும் அந்த சுழலும் வீட்டில் காதல் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இந்த செய்தி வைரலாகிறது.

இந்த காதல் மாளிகையை ஸ்ரபக் (Srbac) நகரில் 72 வயதான வோஜின் குசிக் வடிவமைத்தார். வீடு பச்சை முகப்புடனும், அதன் கூரை சிவப்பு உலோகத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஜன்னல்களுக்கு வெளியே பார்க்க விரும்பும் மனைவியின் ஆசைகளை பூர்த்தி செய்வதற்காக அன்புக் கணவன் அதை சுழல் வீடாக மாற்றியுள்ளார்.

“எனக்கு வயதான பிறகு, என் பிள்ளைகள் குடும்பத் தொழிலை செய்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் எனக்கு போதுமான நேரம் கிடைத்தது. அதனால், என் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு போதுமான நேரம் கிடைத்தது” என்று காதலுடன் சொல்கிறர் கணவர். மனைவி விரும்பும் போதெல்லாம் தனது வீட்டில் அறைகளின் நிலையை மாற்றிக் கொள்ள முடியும் என்று வோஜின் குசிக் (Vojin Kusic) கூறினார்.

வோஜின் குசிக் திருமணம் செய்துக் கொண்டபோது, அவர் தனக்கும் அவரது மனைவிக்கும் வழக்கமான வீட்டைக் கட்டினார், அந்த வீட்டில் தான் அவர்கள் தங்களது மூன்று குழந்தைகளை வளர்த்தனர்.

தங்கள் படுக்கையறைகளின் சூரிய வெளிச்சம் இருக்க வேண்டும் என்று மனைவி விரும்பியதால் அதற்கேற்ப வீட்டைக் கட்டினார்கள். ஆனால் வீட்டின் வரவேற்பரையில் இருந்து சாலையை பார்க்க முடியவில்லை. எனவே, மனைவியின் விருப்பப்படி குசிக் வீட்டை மீண்டும் மறுவடிவமைப்பு செய்தார்.

“எங்கள் இரண்டு படுக்கையறைகளுக்கு இடையில் உள்ள சுவரை வரவேற்பரையாக மாற்றி அனைத்து மின் நிறுவல்களையும் நகர்த்த வேண்டும். அது சவாலான வேலை. என் மனைவிக்காக அவள் விரும்பிவாறு வீட்டை மறுவடிவமைத்தேன்” என்று சொல்கிறார் 72 வயது காதல் கணவர்.

“இப்போது, எங்கள் வீடு சுழல்வதால், தேவையற்ற விருந்தினர்கள் வந்தால், வீட்டை சுழற்றி அவர்களுக்கு வாசல் தெரியாமல் செய்யலாம்” என்று குறும்புடன் சொல்லும் இந்த காதல் கணவர் கல்லூரிக்குச் செல்லாதவர் என்பது ஆச்சரியமானது.

மின்சார மோட்டார் மற்றும் ஒரு பழைய ராணுவப் போக்குவரத்து வாகனத்தின் சக்கரங்களைப் பயன்படுத்தி, தனது சுழலும் வீட்டை அவரே வடிவமைத்து கட்டியிருக்கிறார். காதல் என்ன செய்யும்? மனைவியானாலும் அவரை சுற்றி வரச் செய்யும், காதல் சின்னத்தை உருவாக்கவும் செய்யும் என்பது காலம் தாண்டி நிற்கும் உண்மை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories