
டான்சானியா தீவில் ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
இரண்டு தினங்களுக்கு முன்பு 5 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆமை இறைச்சியுடன் விருந்து சாப்பிட்டனர் . அடுத்த நாள்தான் விஷத்தின் தாக்குதல் அவர்களுக்கு உணரப்பட்டது .
இதில் 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்தது . உயிரிழந்த 7 பேரை தவிர்த்து மொத்தம் 38 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் .
அவர்களில் பெரும்பாலானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 3 பேர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் டான்சானியா தீவுகளில் சுவை மிகுந்த உணவு பதார்த்தமாக ஆமை இறைச்சி இருந்து வருகிறது .
இந்த சம்பவத்திற்கு பின்னர் ஆமை இறைச்சி சாப்பிடுவதை அதிகாரிகள் தடை செய்துள்ளனர் . 7 பேர் உயிரிழப்புக்கு ஆமை இறைச்சி விஷமாக மாறியதே காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்த வகை விஷத்தை கெலானிடாக்ஸிம் என்று வல்லுனர்கள் அழைக்கின்றனர் .
நச்சுத்தன்மை வாய்ந்த உணவை ஆமைகள் சாப்பிட்டதால் , அதனை சாப்பிட்டவர்கள் விஷத்தின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக ஆமை பராமரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .