இங்குள்ள படாபெர் விமானப்படை தளத்தை இன்று அதிகாலை முற்றுகையிட்ட சுமார் 10 பயங்கரவாதிகள் அங்குள்ள பாதுகாப்பு அறை மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் நடத்திய எதிர்த் தாக்குதலில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து வருகின்றது என பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் அசிம் பாஜ்வா தெரிவித்துள்ளார்.


