கொழும்பு :
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையே போதுமானது என்பதை வலியுறுத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு இலங்கை அரசு கடிதம் எழுதியுள்ளது.
இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, நீதித்துறை சுதந்திரத்தை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளது. இதன் காரணமாக போர்க்குற்றத்தை விசாரணை செய்ய, உள்நாட்டு விசாரணையே போதும் என்று தெரிவித்து, 47 நாடுகள் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு இலங்கை அரசு கடிதம் எழுதியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக, கலப்பு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. மற்றும் அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கை அரசு இவ்வாறு கடிதம் எழுதி வருகிறது. மேலும், போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை ஆராய, சந்திரிகா குமாரதுங்கா தலைமையில் இலங்கையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.


