முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விரைவில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான், வாஜ்பாய் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ’அடல் பிகாரி வாஜ்பாய் இந்திய துணை கண்டத்தின் மிகப்பெரிய அரசியல் ஆளுமை, அவர் வெளியுறவு மந்திரியாக பொறுப்பு வகித்த போது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் பொறுப்பை ஏற்றார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்பட அவர் எடுத்த முயற்சிகள் என்றும் நினைவு கூறப்படும்’ என தெரிவித்துள்ளார்.




