மசூத் அசாரை பாதுகாப்பாக இடம் மாற்றிய பாகிஸ்தான் ராணுவம்!

Published:

masood azhar - 2026

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உளவுத் தகவலை அடுத்து ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து பஹவல்பூர் பகுதிக்கு அருகிலுள்ள மிகவும் பாதுகாப்பான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தீவிர தாக்குதல் நடத்திய பின்னர் பாகிஸ்தான் இத்தகைய தாக்குதலை எதிர் பார்த்தது. எனவே உளவுத்துறை தகவலின்படி அவர் மருத்துவமனை இடமாற்றப்பட்டுள்ளார்

மேலும் ஐஎஸ்ஐ தகவல்படி முஜாகிதீன் தலைவர் சையத் சலாவுதீன் மற்றும் அசார் இருவரும் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் புல்வாமா வில் தாக்குதல் நடந்தபோது ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ராவல்பிண்டியில் ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பாக சிகிச்சையில் இருந்தார்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ராணுவம் முழு உத்வேகத்துடன் பயங்கரவாதிகளை அப்புறப்படுத்துவதில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளான கம்ரான், காஸி இருவரையும் அண்மையில் நடந்த பதில் தாக்குதலில் சுட்டுக்கொன்றது இந்திய ராணுவம்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதலில் மவுலானா மசூத் அசார் கொல்லப்படலாம் என்று பாகிஸ்தான் உளவு நிறுவனம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img