December 6, 2025, 5:58 AM
24.9 C
Chennai

சீனாவில் இஸ்லாமிய அடையாளங்களை அதிரடியாக நீக்கும் அரசு! ஹலாலுக்கு ‘நோ’!

china islam - 2025சீனத் தலைநகர் பீஜிங்கில் ஹலால் உணவகங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழியிலான வாசகங்கள் மற்றும் இஸ்லாமிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது!

சீனத் தலைநகர் பீஜிங் நகரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹலால் உணவகங்கள் உள்ளன.

சீனாவில் இரண்டு கோடி இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். இஸ்லாமியர் களால் நடத்தப்படும் உணவகங்கள் மற்றும் உணவு சப்ளை செய்யும் கடைகளில் அரபு மொழி வார்த்தைகளும் இஸ்லாமிய சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.

uighurs - 2025 சீனாவில் அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டாலும் கம்யூனிஸ்ட் கொள்கைகளை அரசு ஆதரித்து வருகிறது.

இந்நிலையில் ஹலால் உணவகங்களில் அரபு மொழி எழுத்துக்கள் மற்றும் இஸ்லாமிய சின்னங்களை அகற்ற வேண்டும் என்று சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இது சீனாவில் வாழும் இஸ்லாமியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

China muslim - 2025அதிகாரிகள் இது குறித்துக் கூறுகையில், அரபு மொழி- அந்நிய மொழி! இது அந்நிய கலாச்சாரம்! சீன கலாச்சாரம் சிறுபான்மை ஆக்கப் பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது… என்றும் கூறியுள்ளனர்

இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களுக்கும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. பல தேவாலயங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீனர்கள் கெடுக்கப்படுவதாகவும் சீன கலாச்சாரம் அழிக்கப்பட்டு வருவதாகவும் அரசு கருதுகிறது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது!

china restaurant - 2025ரெஸ்டாரண்டுகள், கஃபேக்கள், உணவகங்கள் உள்ளிட்டவை ஹலால் முத்திரையிடப்பட்ட பெயரில் இருந்தால் அவற்றை மறைக்கத் தொடங்கியுள்ளன. இது போல் ஹலால் வாசகங்களுடன் இருக்கும் உணவகங்களின் அரபுப் பெயர்கள் மறைக்கப் பட்டு வருகின்றன. அதுபோல், இஸ்லாம் தொடர்பான படங்கள் ஏதாவது குறிப்பிடப் பட்டிருந்தாலும், அந்த பெயர்ப்பலகைகளும் மறைக்கப் பட்டு அல்லது அகற்றப் பட்டு வருகின்றன.

இது போன்ற நடவடிக்கை கடந்த 2016ம் ஆண்டு முதலே நடந்து வருவதாகக் கூறப் படுகிறது. சீனாவில் உள்ள 2 கோடி முஸ்லிம்களும் சீன கலாசாரத்துடன் சீனாவின் பெரும்பான்மையினருடன் கலந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.

இருப்பினும் இதற்கு சீனாவின் இஸாமியர்கள் அதிகம் உள்ள ஜின்ஜியான் மாகாணத்தில் எதிர்ப்பு எழுந்தது. அங்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் போடப்பட்டு, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இங்கே உள்ள உய்குர் முஸ்லிம் சமுதாயம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களில் சுமார் 20 லட்சம் பேர் மறு கல்வி முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories