நிகழும் மங்களகரமான 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி 1-1-2015 வியாழக்கிழமையும் சுக்ல ஏகாதசியும் பரணி நக்ஷத்ரமும் சிம்ம லக்னமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2015 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. 2015 புத்தாண்டு பொதுபலன் சிம்ம லக்னத்தில் வருட பிறப்பு இருப்பதால் லக்னாதிபதி சூரிய பகவான் ஆவார். ஆண்டுதொடக்கத்தில் லக்னாதிபதி சூரியன் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான தனுசில் சஞ்சாரம் பெற்றுள்ளார். இதன் பலன் இந்த ஆண்டு அரசியல் சார்ந்த விஷயங்களில் மாற்றத்தைக் காட்டுகிறது. லக்னாதிபதிக்கு பத்தில் ராகு இருப்பதால் பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும். புத்திரகாரகன் குரு லக்னத்திலேயே இருப்பதால் குழந்தை பிறப்பு அதிகமாகும். நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது. எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். குருவின் பார்வை 7 ஆம் இடத்தில் பதிவதால் கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். தொழில் பங்குதாரர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். அரசியலில் திடீர் மாற்றங்கள் உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள். வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும். கிரக பெயர்ச்சி (வாக்கியப்படி): குருபெயர்ச்சி: 05-07-2015 அன்று கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இனி 12 ராசிகளுக்குமான பலன்களைப் படியுங்கள்…. [su_heading size=”30″ margin=”30″]2015ம் வருட ராசி பலன்கள் [/su_heading] [su_table]
[/su_table]


