தமிழ் மாதங்கள்: சௌரமான ஆண்டுக் கணக்கீட்டில் மாதம் என்பது ஸூர்யன் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் 30 நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது. ஸூர்யன் எந்த ராசியில் என்று பிரவேசிக்கிறானோ அதுவே மாதத்தின் தொடக்க நாளாகவும் அந்த ராசியின் பெயரே மாதத்தின் பெயராகவும் உள்ளது. ஸங்கல்பத்தில் நாம் மாதத்தின் பெயரைக் கூறும்போது இந்தப் பெயர்களையே பயன்படுத்துகிறோம். ஆனால் நடைமுறையில் தமிழ் மாதங்களின் பெயர்கள்-அந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தன்று பௌர்ணமி திதி வருகிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயரையே கொண்டதாக அமைந்துள்ளது. மாதங்களின் பெயர்கள்
நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது சித்திரை – மேஷ மாசம் வைகாசி – ரிஷப மாசம் ஆனி – மிதுன மாசம ஆடி – கடக மாசம் ஆவணி – சிம்ம மாசம் புரட்டாசி – கன்னி மாசம் ஐப்பசி – துலா மாசம் கார்த்திகை -விருச்சிக மாசம் மார்கழி – தனுர் மாசம் தை -மகர மாசம் மாசி – கும்ப மாசம் பங்குனி – மீன மாசம்
-
எந்த மாசத்தில் பௌர்ணமி, அமாவாஸ்யை இல்லையோ அந்த மாஸத்துக்கு விஷமாசம் என்று பெயர்.
-
எந்த மாசத்தில் இரண்டு பௌர்ணமியோ, இரண்டு அமாவாஸ்யையோ வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.
-
விஷ மாசத்திலும், மல மாசத்திலும் சுபகாரியங்களை விலக்க வேண்டும்.
-
ஆனால் சித்திரை, வைகாசி, மாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.




