
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026
இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது
குரு பெயர்ச்சி பலன்கள் – 2025
மீனம்
இதுவரை மூன்றில் இருந்த ராசிநாதன் குரு இனிவரும் 11-05-2025 முதல் சுகஸ்தானத்தில் அமர்வது உங்களின் ராசிக்கு மறைவு ஸ்தானங்களையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வை இடுவது தடைபட்ட காரியம் செயல்படதுவங்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தில் குரு அமர்வது கூட்டு தொழிலில் சிலருக்கு பிரச்சனை உண்டாகும். பேசுவது போல நடக்காமல் உடன் இருந்து சிலர் மாறுவது மனவருத்தத்தை தரும். உடல் நலனின் அக்கறை எடுத்து கொள்ள வேண்டி வரும். நரம்பு சார்ந்த பிரச்சனை உண்டாகும். வாகன வசதிகளை குறைத்துக் கொண்டு இருக்க வேண்டிவரும். அலைச்சல் அதிகரிக்கும்.
அட்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சில தடைகள் நீங்கி நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வழக்குகள் சீக்கிரம் முடிவுக்கு வரும். எதை எதிர்பார்த்து காத்திருந்தீர்களோ அது இனி முடிவுக்கு வரும். மலை போல இருந்த விடயம் பனி போல மறையும். எதற்கு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. குறை சொல்லி கொண்டிருந்தவர்கள் இனி அமைதி ஆவார்கள்.
விரைய சனியுடன் ராகு இணைவு பெறுவது வெளிநாடு செல்தல். வெளிநாடு தொடர்பு உருவாக்குதல். றினைவுக்கு வராத பல காரியம் நினைவுக்கு வந்து செயல்படதுவங்கும். மேலும் குரு விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் தேவையற்ற விரையம் குறைந்து நலம் பெறுவீர்கள். புதிய கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
அசையாத சொத்துகள் வாங்குதல் கட்டிய வீடு வாங்குதல் மூலம் சுப விரையங்கள் உண்டாகும். இதன் மூலம் உங்களின் பல நாட்கள் குறை நீங்கி வளம் பெறுவீர்கள்.
குரு பகவானின் பார்வை பலன்கள்:
குருபகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால், பயணங்கள் உண்டு. அவற்றால் ஆதாயமும் ஏற்படும். எல்லா வகையி லும் செல்வாக்கு அதிகரிக்கும். குருபகவான் 10-ம் இடத்தைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சிலருக்கு வேறு நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். 12-ம் இடத்தை குருபகவான் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு உண்டு. எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எல்லா வகையிலும் வெற்றி அடையும் யோகம் கூடிவரும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம் |
பரிகாரங்கள்:
வியாழக்கிழமை காலை 06.00 – 07.30 மணிக்கு விநாயகர்கள் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு அரிசி மாவில் சக்கரை கலந்து நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் வெற்றியை தரும்.





