குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): கும்பம்

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

கும்பம்

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காமிடத்தில் இருந்த குரு இனிவரும் 11-05-2025 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் ராசியை பார்ப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொள்வீர்கள். தைரியமும் துணிச்சலும் உங்களின் வாழ்வில் வளம் பெற செய்யும்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

ஏற்கனவே ராசியில் ராசிநாதனுடன் ராகு இணைவு பெற்றிருப்பதும் குரு பார்வையால் ஸ்தான பலம் பெறுவதால் உடல்நலனில் நல்ல முன்னேற்றமும் எடுத்த காரியம் வெற்றியும் வேண்டாத விடயங்களை தவிர்த்து மேலும் நற்பலன்களை பெறுவீர்கள். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் காலமாக இது அமையும். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.

பாக்கியஸ்தானத்தை குரு பார்ப்பதால் புனித யாத்திரை சென்று வருதல் நல்ல படியாக தொழில் செய்யவும். ஏற்கனவே இருக்கும் தொழிலை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அமையும். கொடுத்த வாக்குறுதிகளையும், செயல்களையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் மேன்மை அடைய செய்யும்.

லாபஸ்தானத்தை குரு பார்வை இடுவதால் செய்யும் தொழிலிலும், வேறு வழிகளிலும் உங்களுக்கு பணபுழக்கம் இருக்கும் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும். காத்திருந்து செயல்படுவது போல வாய்ப்பு தேடி வந்து உங்களை ஊக்கபடுத்தும். நினைத்த காரியம் கைகூடும்.

உடல்நலனின் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய திட்டங்களில் இனி முழு கவனம் செலுத்தி நன்மை அடைவீர்கள். 08-06-2025 முதல் 08-07-2025 வரை சற்று கவனமாக இருப்பது நல்லது எதையும் யோசித்து செயல்படவும்..

ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

குரு பகவானின் பார்வை பலன்கள்: 

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், புது உத்வேகம் பிறக்கும். விஐபிகளின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். தோற்றப் பொலிவு கூடும். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தை குரு பார்ப்பதால், தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவர் வழிச் சொத்துகள் கைக்கு வரும். இதுவரை வறண்டு கிடந்த பணப்பை, இனி நிரம்பும். சேமிக்கும் அளவுக்கு பொருள் வரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.லாபஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், தொழில்-வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். புது முதலீடுகள் செய்வீர்கள். புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப் புடவை, தங்க ஆபரணம் வாங்கிக் கொடுப்பீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள். உங்கள் மீது இருந்த வீண் பழியும் அகலும் 

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் பைரவருக்கு தேங்காய் உடைத்து அதில் நெய் தீபம் ஏற்றி அரளி பூ மாலை போட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் அனுகூலமாக அமையும்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories