
இன்றைய பஞ்சாங்கம்: ஜூன் 21
ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆனி ~ 7 ( 21.6.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ பராபவ வருஷம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம்~ ஆனி மாஸம் { மிதுன மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி~ இரவு 9.04 PM வரை ஸப்தமி பின் அஷ்டமி.
நாள் ~ பானு வாஸரம் ( ஞாயிற்றுக்கிழமை )
நட்சத்திரம் ~ மாலை 3.16 PM வரை பூரம் பின் உத்தரம்.
யோகம் ~ ஸித்தி.
கரணம் ~ கரஜை / வணிஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00 PM.
எமகண்டம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30 PM.
நல்லநேரம் ~ 9.00 to 10.30 AM & 3.00 to 4.30 PM.
சூரிய உதயம் ~. காலை 5.54.
சந்திராஷ்டமம் ~ மகரம்.
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ ஸப்தமி.
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (21-6-2026) ராசி பலன்கள்
மேஷம்
பலதரப்பட்ட சிந்தனைகளால் சோர்வு ஏற்படும். பணியிடத்தில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களுடன் வெளியூர் சென்று வருவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கால்நடைகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : மாற்றமான நாள்.
பரணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
கிருத்திகை : செலவுகள் உண்டாகும்.
ரிஷபம்
வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். தாயாருடன் அனுசரித்து செல்லவும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். வங்கி பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். அரசு தொடர்பான புரிதல்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : இழுபறிகள் குறையும்.
மிருகசீரிஷம் : புரிதல்கள் மேம்படும்.
மிதுனம்
திட்டமிட்ட பணிகளில் இருந்த தடைகள் மறையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புது விதமான மாற்றங்கள் ஏற்படும். கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவமும் உருவாகும். கணவன் மனைவி இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் புரிதலும் தெளிவும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : தடைகள் மறையும்.
திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.
புனர்பூசம் : தெளிவும் ஏற்படும்.
கடகம்
கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். நிதானமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களால் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். உறவினர்களின் வருகைகள் ஏற்படும். திடீர் மாற்றங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
புனர்பூசம் : புரிதல் ஏற்படும்.
பூசம் : நன்மையான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மகம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரம் : விவேகத்துடன் செயல்படவும்.
உத்திரம் : அனுபவங்கள் கிடைக்கும்.
கன்னி
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபார பணிகளில் கனிவான பேச்சுகள் நன்மையை தரும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். இறை சார்ந்த பணிகளில் மதிப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : விழிப்புணர்வு வேண்டும்.
அஸ்தம் : நன்மையான நாள்.
சித்திரை : மதிப்புகள் கிடைக்கும்.
துலாம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உங்கள் மீதான சிறு சிறு வதந்திகள் மறையும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறையால் லாபம் மேம்படும். புதிய வாகனம் முயற்சிகள் கைகூடிவரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
சுவாதி : வதந்திகள் மறையும்.
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.
விருச்சிகம்
குடும்பத்தில் சுப காரியங்கள் எண்ணம் ஈடேறும். வியாபார பணிகளில் இருந்த போட்டிகள் குறையும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : எண்ணம் ஈடேறும்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : ஆதாயம் உண்டாகும்.
தனுசு
புதிய முயற்சிகளுக்கு அதிகாரிகளின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். மனதளவில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூராடம் : ஈடுபாடு மேம்படும்.
உத்திராடம் : பயணங்கள் கைகூடும்.
மகரம்
எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படவும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் சில விரயங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வாடிக்கையாளர்களிடம் நயமான பேச்சுக்கள் உங்களின் நன்மதிப்பை உருவாக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : மதிப்புகள் மேம்படும்.
கும்பம்
மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். பேச்சுத் திறமையால் வரவுகள் அதிகரிக்கும். பயணங்களில் இருந்த இழுபறிகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : ஆதாயம் ஏற்படும்.
சதயம் : நெருக்கம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
மீனம்
நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த சஞ்சலம் விலகும். கொடுக்கல் வாங்கலில் திடீர் திருப்பம் ஏற்படும். எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். செயல்களில் இருந்த தடைகள் மறையும். உடல் அளவில் இருந்த கவலைகள் குறையும். தந்தை வழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : புரிதல்கள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : திருப்பம் ஏற்படும்.
ரேவதி : பிரச்சனைகள் குறையும்.
தினம் ஒரு திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
நன்னம்பிக்கை மொழி!
- எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
- நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
- பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
- வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
- ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
- ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!





தினசரி பஞà¯à®šà®¾à®™à¯à®•ம௠மறà¯à®±à¯à®®à¯ தினப௠பலனà¯à®•ள௠உபயோகமாக உளà¯à®³à®¤à¯. நனà¯à®±à®¿.
Nice to read this rasi palan
Very interesting to read this rasi palan
Very very helpful.
very good response