December 20, 2025, 9:24 AM
25.7 C
Chennai

பஞ்சாங்கம் டிச.14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

dhinasari panchangam jyothidam - 2025
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம்: டிச.14

ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:|| 
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

கார்த்திகை * ~ 28 (14. 12.2025* ) ஞாயிற்றுக் கிழமை*
வருடம் ~ விச்வாவஸூ வருஷம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத்* ருது.
மாதம்~ கார்த்திகை மாஸம் { *விருச்சிக மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 10 .11 pm வரை தசமி பின் ஏகாதசி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 12.12 pm வரை ஹஸ்தம் பின் சித்திரை
யோகம் ~ ஸௌபாக்யம்
கரணம் ~ வணிஜை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் * ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.25
சந்திராஷ்டமம் ~ கும்பம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ தசமி
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்

பிற்பகல்

12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்

மாலை

4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

astrology panchangam rasipalan dhinasari - 2025

இன்றைய (14-12-2025) ராசி பலன்கள்


மேஷம்

சகோதரர்களால் நன்மை உண்டாகும். தேவையானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்வான சூழல் நிலவும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

அஸ்வினி : நன்மையான நாள்.
பரணி : இன்னல்கள் விலகும்.
கிருத்திகை : மகிழ்வான நாள்.


ரிஷபம்

உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய துறை சார்ந்த வாய்ப்பு ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.
ரோகிணி : உதவி கிடைக்கும்.
மிருகசீரிஷம் : முடிவுகளில் கவனம்.


மிதுனம்

நீண்ட தூர பயணங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கட்டுமான துறைகளில் லாபம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். உத்யோகத்தில் உயர்வுகள் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : திட்டமிட்டு செயல்படவும்.
புனர்பூசம் : உயர்வுகள் உண்டாகும்.


கடகம்

எதிலும் தீர யோசித்து முடிவு செய்யவும். கடன் பிரச்சனை தீர ஆலோசனை கிடைக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். வியாபாரத்தில் ஒப்பந்தம் சாதகமாகும். எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். உண்ணும் உணவில் கவனம் வேண்டும். பெரியோர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

புனர்பூசம் : ஆலோசனை கிடைக்கும்.
பூசம் : ஒப்பந்தம் சாதகமாகும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.


சிம்மம்

உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். அரசால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை பற்றிய புரிதல் மேம்படும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

மகம் : பேச்சுக்களில் கவனம்.
பூரம் : துரிதம் ஏற்படும்.
உத்திரம் : புரிதல் மேம்படும்.


கன்னி

அரசு செயல்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். துணைவர் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : விமர்சனங்கள் மறையும்.
அஸ்தம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


துலாம்

தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.


விருச்சிகம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு நன்மைகளை செய்வீர்கள். பழைய பிரச்சனை முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உழைப்புக்கான மதிப்புகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : வரவுகள் உண்டாகும்.
கேட்டை : அனுகூலம் உண்டாகும்.


தனுசு

சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் ஏற்படும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அரசாங்க காரியம் இழுபறிக்குப் பின்னர் முடியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

மூலம் : செலவுகள் உண்டாகும்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.


மகரம்

மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எண்ணங்களில் சில மாற்றம் உண்டாகும். மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : பொறுமை வேண்டும்.
திருவோணம் : மாற்றம் உண்டாகும்.
அவிட்டம் : பொறுப்புகள் கிடைக்கும்.


கும்பம்

கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்லவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். மற்றவர்களை நம்பி செய்லபடுவதை தவிர்க்கவும். விருப்பம் இல்லாத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். அலுவலகத்தில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


மீனம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திறமைக்கான மதிப்புகள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்

பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.
உத்திரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
ரேவதி : மதிப்புகள் உண்டாகும்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar 1 - 2025

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)

பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2025

தினம் ஒரு திருமுறை

மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே

விளக்கவுரை

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்


srirangam ranganathar - 2025

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)

விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.

நன்னம்பிக்கை மொழி!

  • எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
  • நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
  • பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
  • வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
  • ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
  • ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!

5 COMMENTS

  1. தினசரி பஞ்சாங்கம் மற்றும் தினப் பலன்கள் உபயோகமாக உள்ளது. நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

Topics

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

பஞ்சாங்கம் டிச.19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories