
இன்றைய பஞ்சாங்கம்: மார்ச் 22
ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பங்குனி ~ 08 (22.3.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ விச்வாவஸூ வருஷம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { மீன மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ இரவு 12.14 வரை சதுர்த்தி பின் பஞ்சமி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ இரவு 1.28 am வரை பரணி பின் கார்த்திகை
யோகம் ~ வைதிருதி
கரணம் ~ வணஜி
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.20
சந்திராஷ்டமம் ~ கன்னி
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ சதுர்த்தி
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (22-3-2026) ராசி பலன்கள்
மேஷம்
தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பங்கள் ஏற்படும். காப்பீடு சார்ந்த செயல்களில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். மகிழ்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : குழப்பங்கள் ஏற்படும்.
பரணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : பொறுப்புகள் குறையும்.
ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். மற்றவர்கள் குறைகளை பெரிது படுத்தாமல் இருக்கவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் சில வருத்தங்கள் நேரிடும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் மேம்படும்.
மிதுனம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் ஏற்படும். எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை தேவைகளை மேம்படுத்துவீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : அனுகூலம் ஏற்படும்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.
புனர்பூசம் : தேவைகள் மேம்படும்.
கடகம்
வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியத்தில் சில மாற்றமான அனுபவம் ஏற்படும். குடும்பத்தினரும் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். நண்பர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : உதவிகள் சாதகமாகும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : வருத்தங்கள் நீங்கும்.
சிம்மம்
உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார எண்ணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். திருப்பணி செயல்களில் ஆர்வம் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு காரியங்களில் எதிர்பார்ப்புகள் தாமதமாகி நிறைவேறும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : பொறுமை வேண்டும்.
பூரம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திரம் : தாமதம் உண்டாகும்.
கன்னி
இனம் புரியாத சிந்தனைகளால் மன உளைச்சல்கள் அதிகமாகும். சுபகாரிய முயற்சிகளில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது உத்தமம். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : வாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
துலாம்
உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமான பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஒத்துழைப்பான நாள்.
சுவாதி : அனுகூலம் ஏற்படும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மற்றும் நெருக்கடியான சூழல்கள் மறையும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்
விசாகம் : தெளிவு பிறக்கும்.
அனுஷம் : ஆதாயம் ஏற்படும்.
கேட்டை : நெருக்கடிகள் மறையும்.
தனுசு
பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதுவிதமான இலக்குகள் உருவாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்கவும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆடம்பர செலவை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மூலம் : இலக்குகள் பிறக்கும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : புரிதல் ஏற்படும்.
மகரம்
ஆன்மீக பெரியோர்களின் சந்திப்புகள் ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
உத்திராடம் : சந்திப்புகள் ஏற்படும்.
திருவோணம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
அவிட்டம் : விவேகம் வேண்டும்.
கும்பம்
சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் உருவாகும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கம் உண்டாகும். வாகன பராமரிப்பு தொடர்பாக செலவுகள் ஏற்படும். அடமான பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. படிப்பில் இருந்த மந்த நிலை சற்று மறையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்
அவிட்டம் : ஏற்ற இறக்கமான நாள்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : மந்தநிலை மறையும்.
மீனம்
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொன் ஆபரண பொருட்களில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : வரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : குழப்பங்கள் விலகும்.
ரேவதி : கவனம் வேண்டும்.
தினம் ஒரு திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
நன்னம்பிக்கை மொழி!
- எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
- நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
- பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
- வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
- ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
- ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!




தினசரி பஞà¯à®šà®¾à®™à¯à®•ம௠மறà¯à®±à¯à®®à¯ தினப௠பலனà¯à®•ள௠உபயோகமாக உளà¯à®³à®¤à¯. நனà¯à®±à®¿.
Nice to read this rasi palan
Very interesting to read this rasi palan
Very very helpful.
very good response