பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 16

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பங்குனி ~ .. 2 ( 16.3.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 08.55 am வரை துவாதசி பின் த்ரயோதசி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ மறுநாள் காலை 5.57 am வரை அவிட்டம் பின் சதயம்
யோகம் ~ சிவம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.24
சந்திராஷ்டமம் ~ 5.35 pm வரை மிதுனம் பின் கடகம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ த்ரயோதசி
இன்று ~ ப்ரதோஷம்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (16-3-2026) ராசி பலன்கள்


மேஷம்

புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். வர்த்தக சிந்தனைகள் புதுவிதமான உத்திகள் மூலம் லாபங்களைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். பொன் பொருள் சேர்க்கைக்கான சூழல் ஏற்படும். தானியம் மற்றும் ஆபரண தொடர்பான பணிகளில் லாபங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வட மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : வரவுகள் கிடைக்கும்.
பரணி : நெருக்கடிகள் குறையும்.
கிருத்திகை : லாபங்கள் ஏற்படும்.


ரிஷபம்

சிந்தனையில் போக்கில் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிக செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் லாபங்கள் மேம்படும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் பணிகளிலிருந்து வந்த பொறுப்புகள் குறையும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
ரோகிணி : லாபங்கள் மேம்படும்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.


மிதுனம்

பணிகளில் பொறுப்புகளும் அலைச்சலும் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மற்றவர்கள் பற்றி கருத்துக்களை கூறும்போது சிந்தித்து செயல்படவும். நண்பர்களிடத்தில் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். வியாபார செயல்களில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். வாகனப் பயணங்களின்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : அலைச்சல் உண்டாகும்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.


கடகம்

கணவன் மனைவியிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு மறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துகளால் நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பாச நிறம்

புனர்பூசம் : வாதங்கள் மறையும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : நன்மைகள் உண்டாகும்.


சிம்மம்

மற்றவர்களிடம் எதிர்பார்த்து இருந்த உதவிகள் சாதகமாக கிடைக்கும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சாதகமாகும். பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் அமையும். நெருக்கமானவர்கள் இடத்தில் கோபம் இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

மகம் : உதவிகள் சாதகமாகும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : திருப்தியான நாள்.


கன்னி

உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிலும் தனித்து செயல்படுவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

உத்திரம் : பிரார்த்தனைகள் நிறைவேற்றுவீர்கள்.
அஸ்தம் : மேன்மை ஏற்படும்.
சித்திரை : ஆதாயகரமான நாள்.


துலாம்

குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனை போக்கில் சில மாற்றங்கள் காணப்படும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு கல்வியில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : தேடல் அதிகரிக்கும்.


விருச்சிகம்

பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடினமான செயல்களை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அனுஷம் : அனுபவம் வெளிப்படும்.
கேட்டை : திறமைகள் வெளிப்படும்.


தனுசு

புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் நன்மைகள் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். குடும்ப நபர்களிடம் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மூலம் : அறிமுகம் உண்டாகும்.
பூராடம் : நன்மைகள் ஏற்படும்.
உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


மகரம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தடைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வர்த்தக செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். கருத்துக்களை கூறும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : தாமதம் ஏற்படும்.
திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.


கும்பம்

பிள்ளைகளால் மன வருத்தம் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். குலதெய்வ தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் புனித யாத்திரை பயணங்கள் கைகூடும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன வரவுகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : சேமிப்பு குறையும்.
சதயம் : பயணங்கள் கைகூடும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.


மீனம்

குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். இலக்கிய துறைகளில் தனிப்பட்ட கவனம் ஏற்படும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.


thiruvalluvar 1 - 2026

தினம் ஒரு திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.

மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

இன்றைய சிந்தனைக்கு…

காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!

நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!

தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories