
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – டிச.15
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
கார்த்திகை ~ .. 29 ( 15.12.2025 ) திங்கள் கிழமை*
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம்~ கார்த்திகை மாஸம் { விருச்சிக மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 11.51 pm வரை ஏகாதசி பின் த்வாதசி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 2.14 pm வரை சித்திரை பின் ஸ்வாதி
யோகம் ~ சோபனம்
கரணம் ~ பவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.25
சந்திராஷ்டமம் ~ மீனம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ ஏகாதசி
இன்று ~ ஏகாதசி
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (15-12-2025) ராசி பலன்கள்
மேஷம்
வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமின்றி நடக்கும். எதிர்பார்ப்புகள் சில நிறைவேறும். தான தர்மங்களில் மனம் ஈடுபடும். பிரமுகர்களின் சந்திப்புகளால் ஆதாயம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : ஆதாயம் கிடைக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
ரிஷபம்
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : புதுமையான நாள்.
மிருகசீரிஷம் : முடிவுகள் பிறக்கும்.
மிதுனம்
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியூரில் இருந்து அனுகூலமான தகவல்கள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு தகுந்த விதத்தில் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
திருவாதிரை : சிந்தனை மேம்படும்.
புனர்பூசம் : லாபம் மேம்படும்.
கடகம்
தாய் வழி உறவுகளிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய வேலைகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். பயணங்களால் அனுபவம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நில நிறம்
புனர்பூசம் : வேறுபாடுகள் குறையும்.
பூசம் : பிரச்சனைகள் குறையும்.
ஆயில்யம் : அனுபவம் மேம்படும்.
சிம்மம்
இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : காரியம் கைக்கூடும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : பாராட்டுக்கள் கிடைக்கும்.
கன்னி
நினைத்த பணிகளில் தாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்ப்படுத்தும். சக ஊழியர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நற்செய்தி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
உத்திரம் : தாமதம் ஏற்படும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : ஒத்துழைப்பு ஏற்படும்.
துலாம்
இனம் புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். பார்வை தொடர்பான சிக்கல்கள் குறையும். வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் வளைந்து செல்வது நல்லது. வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
சித்திரை : கவலைகள் மறையும்.
சுவாதி : சிக்கல்கள் குறையும்.
விசாகம் : கனிவு வேண்டும்.
விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கு வரும். விவசாய பணிகளில் அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். சக ஊழியர்களால் வருத்தங்கள் நேரிடும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : அனுபவம் உண்டாகும்.
கேட்டை : ஆர்வம் ஏற்படும்.
தனுசு
குடும்ப பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு பெருகும். வியாபாரம் சிறப்பாக அமையும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
மூலம் : பிரச்சனைகள் குறையும்.
பூராடம் : அமைதி நிலவும்.
உத்திராடம் : ஆதரவு பெருகும்.
மகரம்
தொழில் ரீதியான எண்ணம் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பெரிய மனிதர்களின் சந்திப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : தடைகள் விலகும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : அனுபவம் ஏற்படும்.
கும்பம்
பண வரவு தாமதாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். பழைய சிக்கல்கள் சில குறையும். கணவன், மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : மதிப்பு உயரும்.
பூரட்டாதி : போட்டிகள் மேம்படும்.
மீனம்
செய்யும் பணிகளில் சற்று கவனம் மீண்டும். ஜாமீன் விஷயங்களை தவிர்க்கவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்துவது நல்லது. நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை பெற்று தரும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.
ரேவதி : மதிப்புகள் மேம்படும்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!





It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.