பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – மே 4

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

சித்திரை ~ 21 ( 4.5.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ சித்திரை மாஸம் { மேஷ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ மறுநாள் காலை 4.40 am வரை த்ருதீயை பின் சதுர்த்தி.
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 9.30 am வரை அனுஷம் பின் கேட்டை.
யோகம் ~ பரிகம்.
கரணம் ~ வணிஜை / பத்திரை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9 to 10.30 am & 5 to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 5.57
சந்திராஷ்டமம் ~ மேஷம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ த்ருதீயை.
இன்று ~ அக்னி நக்ஷத்ர ஆரம்பம்.

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (4-5-2026) ராசி பலன்கள்


மேஷம்

எதிர்பாராத சில செலவுகள் நேரிடும். புதிய நபர்களால் மாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் ஒருவித சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : மாற்றம் உண்டாகும்.
பரணி : விவேகம் வேண்டும்.
கிருத்திகை : சோர்வுகள் நீங்கும்.


ரிஷபம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். சகோதரர்கள் வகையில் ஆதாயம் ஏற்படும். துணைவர் வழி உறவுகள் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் அதிகரிக்கும். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டதிசை : வடக்கு
அதிர்ஷ்டஎண் : 8
அதிர்ஷ்டநிறம் : அடர் நீல நிறம்

கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும்.
ரோகிணி : ஆதாயம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : மதிப்புகள் கிடைக்கும்.


மிதுனம்

கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். தாய் மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் வருகைகள் ஏற்படும். வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : அனுகூலம் ஏற்படும்.
திருவாதிரை : தீர்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : மாற்றமான நாள்.


கடகம்

குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணி விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


சிம்மம்

தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

மகம் : சிந்தித்து செயல்படவும்.
பூரம் : முடிவுகள் கிடைக்கும்.
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.


கன்னி

தொழில் சம்பந்தப்பட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பிறக்கும். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் எண்ணங்களை புரிந்து செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.
அஸ்தம் : தீர்வுகள் பிறக்கும்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.


துலாம்

புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். உறவுகளுடன் பொறுமை வேண்டும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : வரவுகள் கிடைக்கும்.
சுவாதி : பொருட்களில் கவனம்.
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


விருச்சிகம்

கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். தோற்றங்களில் சிறுசிறு மாற்றங்கள் காணப்படும். வரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். பயணம் மூலம் சிந்தனைபோக்கில் சில தெளிவுகள் பிறக்கும். உத்தியோகத்தில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

விசாகம் : புரிதல் அதிகரிக்கும்.
அனுஷம் : நெருக்கடிகள் குறையும்.
கேட்டை : அனுபவம் கிடைக்கும்.


தனுசு

சுபகாரிய செலவுகள் உண்டாகும். பழைய சிந்தனைகள் மூலம் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். கலைதுறைகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டதிசை : வடக்கு
அதிர்ஷ்டஎண் : 8
அதிர்ஷ்டநிறம் : வெளிர் நீல நிறம்

மூலம் : செலவுகள் உண்டாகும்.
பூராடம் : லாபங்கள் மேம்படும்.
உத்திராடம் : அனுபவங்கள் கிடைக்கும்.


மகரம்

தன வரவுகள் மேம்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்கள் கைகூடும். வேலையில் நல்ல மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளால் அனுகூலம் உண்டாகும். வரவுகள் தாராளமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு திருப்தியை உருவாக்கும். சமூகப் பணிகளில் அங்கீகாரங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டதிசை : வடமேற்கு
அதிர்ஷ்டஎண் : 3
அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.


கும்பம்

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் கைக்கூடி வரும். புது விதமான ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். பணிகளில் இருந்து வந்த மந்த தன்மை படிப்படியாக குறையும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சதயம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூரட்டாதி : அனுபவங்கள் கிடைக்கும்.


மீனம்

சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற மனநிலை பிறக்கும். தன வருவாயில் இருந்து வந்த தடைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டதிசை : மேற்கு
அதிர்ஷ்டஎண் : 6
அதிர்ஷ்டநிறம் : பாச நிறம்

பூரட்டாதி : செல்வாக்கு மேம்படும்.
உத்திரட்டாதி : தடைகள் குறையும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


thiruvalluvar 1 - 2026

தினம் ஒரு திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.

மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

இன்றைய சிந்தனைக்கு…

காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!

நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!

தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories