
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – ஜூன் 15
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆனி ~ 1 ( 15.6.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம்~ ஆனி மாஸம் { மிதுன மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ காலை 9.24 AM வரை அமாவாஸ்யை பின் ப்ரதமை.
நாள் ~ ஸோம வாஸரம் { திங்கள் கிழமை }
நட்சத்திரம் ~ இரவு 9.04 PM வரை ம்ருகசீர்ஷம் பின் திருவாதிரை.
யோகம் ~ சூலம்.
கரணம் ~ நாகவம் / கிம்ஸ்துக்னம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9 to 10.30 am & 5 to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 5.54
சந்திராஷ்டமம் ~ காலை 9.52 AM வரை துலாம் பின் விருச்சிகம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ சூன்ய.
இன்று ~ கரிநாள்.
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (15-6-2026) ராசி பலன்கள்
மேஷம்
உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூர பயணங்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணி புரியும் இடத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பரணி : தேவைகள் பூர்த்தியாகும்.
கிருத்திகை : வரவுகள் உண்டாகும்.
ரிஷபம்
வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விதண்டாவாதங்களை தவிர்க்கவும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் நல்ல ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரோகிணி : வாதங்களை தவிர்க்கவும்.
மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
மிதுனம்
பழைய நினைவுகள் மூலம் ஒரு விதமான சோர்வுகள் தோன்றி மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : சோர்வுகள் மறையும்.
திருவாதிரை : சூழ்நிலை அறிந்து செயல்படவும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
கடகம்
வித்தியாசமான பொருட்கள் மீதான ஆர்வத்தினால் விரயங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பும் முன்னேற்றமும் காணப்படும். சுப காரிய தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருள்களில் ஆர்வம் உண்டாகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : விரயங்கள் ஏற்படும்.
பூசம் : அலைச்சல்கள் மேம்படும்.
ஆயில்யம் : அனுபவம் கிடைக்கும்.
சிம்மம்
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். எதையும் எதிர்கொள்ளும் மனஉறுதி மேம்படும். கல்வி பணிகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். வெளியூர் பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பயனற்ற செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : குழப்பங்கள் குறையும்.
உத்திரம் : சேமிப்பு மேம்படும்.
கன்னி
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வரவுகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். கேளிக்கையான செயல்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிலும் நேர்மையுடனும் கடமையுடனும் செயல்படுவீர்கள். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : தடைகளை அறிவீர்கள்.
சித்திரை : மதிப்புகள் கிடைக்கும்.
துலாம்
வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் தெளிவுகள் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் ஒரு விதமான மந்தத்தன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : நன்மைகள் உண்டாகும்.
சுவாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
விசாகம் : மந்தத்தன்மை உண்டாகும்.
விருச்சிகம்
உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆடம்பர பொருள்களால் நெருக்கடிகள் ஏற்படும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் விவேகம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : குழப்பங்கள் உண்டாகும்.
கேட்டை : விவேகம் வேண்டும்.
தனுசு
சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபார பணிகளில் மதிப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகள் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில் சில மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.
உத்திராடம் : மாற்றமான நாள்.
மகரம்
உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் சாதகமான உதவிகள் ஏற்படும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். புதுவிதமான கனவுகள் உருவாகும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : புரிதல்கள் உண்டாகும்.
அவிட்டம் : வேறுபாடுகள் குறையும்.
கும்பம்
பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் லாபம் மேம்படும். வியபார பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். மனதில் கற்பனை சார்ந்த புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
அவிட்டம் : மனஸ்தாபம் ஏற்படும்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : பொறுப்புகள் குறையும்.
மீனம்
எதிர்பார்த்த சில வேலைகள் நிறைவு பெறும். தாயிடம் இருந்த வேறுபாடுகள் நீங்கும். நெருக்கடியான சூழல்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழில் நிமித்தமான பயணம் மேம்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களால் நிம்மதி ஏற்படும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : வேறுபாடுகள் நீங்கும்.
உத்திரட்டாதி : பயணம் மேம்படும்.
ரேவதி : மதிப்புகள் கிடைக்கும்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!





It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.