
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – ஆக.03
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆடி ~ 18 ( 3.8.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம்~ ஆடி மாஸம் { கடக மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ இரவு 9.12 PM வரை பஞ்சமி பின் ஷஷ்டி.
நாள் ~ ஸோம வாஸரம் { திங்கள் கிழமை }
நட்சத்திரம் ~ இரவு 9.06 PM வரை உத்தரட்டாதி பின் ரேவதி.
யோகம் ~ ஸுகர்மம்.
கரணம் ~ கௌலவம் / தைதுளை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00 AM.
எமகண்டம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON
நல்ல நேரம் ~ 9 to 10.30 AM & 5 to.5.30 PM
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00 PM.
சூரியஉதயம் ~ காலை 6.05.
சந்திராஷ்டமம் ~ ஸிம்ஹம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ பஞசமி.
இன்று ~ ஆடிப்பெருக்கு.
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (3-8-2026) ராசி பலன்கள்
மேஷம்
விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். மனை சார்ந்த உதவிகள் சாதகமாகும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறவினர்கள் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் இருந்த ஆர்வமின்மை குறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : உதவிகள் சாதகமாகும்.
பரணி : முன்னேற்றம் ஏற்படும்.
கிருத்திகை : ஆர்வமின்மை குறையும்.
ரிஷபம்
ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செல்வ சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் கைகூடும். இணையத் துறைகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
கிருத்திகை : மதிப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : தெளிவு பிறக்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் ஏற்படும்.
மிதுனம்
வியாபார தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். சவாலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : மாற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : செல்வாக்குகள் மேம்படும்.
கடகம்
வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வெளியூர் பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். இறை சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா நிறம்
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூசம் : முயற்சிகள் கைகூடும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களிடத்தில் வாதங்களை தவிர்க்கவும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பது தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : தாமதம் உண்டாகும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : நெருக்கடியான நாள்.
கன்னி
வியாபாரப் பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். போட்டி தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். காப்பீடு பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திரம் : தாமதங்கள் குறையும்.
அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.
சித்திரை : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
துலாம்
கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உறவினர்கள் வருகை உண்டாகும். கனிவான பேச்சுக்களால் காரிய சித்தி ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
சித்திரை : இன்னல்கள் குறையும்.
சுவாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
விசாகம் : மாற்றமான நாள்.
விருச்சிகம்
மாற்றமான சிந்தனைகள் மூலம் புதுவிதமான அனுபவங்களும் சூழ்நிலைகளும் உருவாகும். உங்கள் மீதான அவப்பெயர்கள் அகலும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பூர்விக சொத்துக்கள் குறித்த சிந்தனைகள் மேம்படும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : அனுபவங்கள் கிடைக்கும்.
அனுஷம் : பொறுமை வேண்டும்.
கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.
தனுசு
உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும். பயணங்களில் இருந்து வந்த காலதாமதம் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : தாமதம் குறையும்.
மகரம்
புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். விமர்சன பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. மாறுபட்ட அணுகு முறையில் செயல்படுவீர்கள். சொத்து விற்பது, வாங்குவதில் லாபமான சூழல் அமையும். புதிய மின்சார பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் மதிப்பு மரியாதை மேம்படும். பணி நிமித்தமான உதவிகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.
திருவோணம் : லாபமான நாள்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
கும்பம்
குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் மூலம் மனதில் குழப்பமான சூழல் அமையும். பணி நிமித்தமான அலைச்சல் மேம்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : வேறுபாடுகள் குறையும்.
சதயம் : குழப்பமான நாள்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
மீனம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். எதிலும் திருப்தியற்ற சூழல் அமையும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : அலைச்சல்கள் உண்டாகும்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!

