
||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – மே 11
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை ~ 28 ( 11.5.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ சித்திரை மாஸம் { மேஷ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ பகல் 11.07 am வரை நவமி பின் தசமி.
நாள் ~ ஸோம வாஸரம் { திங்கள் கிழமை }
நட்சத்திரம் ~ இரவு 9.28 pm வரை சதயம் பின் பூரட்டாதி.
யோகம் ~ மாஹேந்திரம்.
கரணம் ~ கரஜை / வணிஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம் / அசுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9 to 10.30 am & 5 to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 5.55
சந்திராஷ்டமம் ~ கடகம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ தசமி.
இன்று ~ .
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (11-5-2026) ராசி பலன்கள்
மேஷம்
வியாபார பணிகளில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
அஸ்வினி : முன்னேற்றம் ஏற்படும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் சார்ந்த செயல்பாடுகள் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் கடமை உணர்வு அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். மனதில் இருந்த கவலைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரோகிணி : நெருக்கடிகள் குறையும்.
மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.
மிதுனம்
சக பணியாளர்களால் ஆதாயம் ஏற்படும். ஆன்மீக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சில புரிதல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.
திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : புரிதல் அதிகரிக்கும்.
கடகம்
உத்தியோக பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கடன் செயல்களில் பொறுமை காக்கவும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். வழக்குகளில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.
பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
ஆயில்யம் : வரவுகள் உண்டாகும்.
சிம்மம்
ஆரோக்கிய பிரச்சனைகள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், வாழ்க்கை பற்றிய தெளிவும் ஏற்படும். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : புத்துணர்ச்சியான நாள்.
பூரம் : புரிதல் உண்டாகும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
கன்னி
கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : நம்பிக்கை உண்டாகும்.
சித்திரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
துலாம்
பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். இறை பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தந்தை வழியில் இருந்த வேறுபாடுகள் விலகும். புதிய முயற்சிகளில் நுட்பங்களை பயன்படுத்தி சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மூலம் மாற்றமான சூழல்கள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : அனுகூலம் உண்டாகும்.
சுவாதி : வேறுபாடுகள் விலகும்.
விசாகம் : மாற்றமான நாள்.
விருச்சிகம்
செயல்பாடுகளில் ஒருவிதமான மந்ததன்மை உண்டாகும். பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபார ரீதியான பயணங்கள் உண்டாகும். படிப்பில் கவனம் வேண்டும். நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
விசாகம் : மந்ததன்மை உண்டாகும்.
அனுஷம் : சோர்வு நீங்கும்.
கேட்டை : வாதங்கள் மறையும்.
தனுசு
மறைமுகமான எதிர்ப்புகள் குறையும். மனதில் நினைத்த காரியம் ஈடேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாளாக இருந்த குழப்பங்கள் விலகும்.
அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மூலம் : எதிர்ப்புகள் குறையும்.
பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : குழப்பங்கள் விலகும்.
மகரம்
பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பழைய நிகழ்வுகளால் மகிழ்ச்சியான சூழல்கள் அமையும். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் குறையும். நகல் பணிகளில் இருந்த நெருக்கடிகள் மறையும். அடமான பொருள்கள் எண்ணம் பிறக்கும். உறவுகளில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஏற்பட்ட வேறுபாடுகள் குறையும். திடீர் வரவுகள் முலம் கையிருப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : எதிர்ப்புகள் குறையும்.
அவிட்டம் : கையிருப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்
சமூக பணிகளில் மேன்மை ஏற்படும். பழைய பிரச்சனைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடல் தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். அலுவலகப் பணியில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். வெளிவட்டத்தில் செல்வாக்குகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அவிட்டம் : மேன்மை ஏற்படும்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : செல்வாக்குகள் மேம்படும்.
மீனம்
உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். பிற மொழி பேசும் மக்களால் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். நெருக்கமானவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்
பூரட்டாதி : விட்டுக் கொடுத்து செல்லவும்.
உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.

தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…
காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!





It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.