
இன்றைய பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
வைகாசி ~ 29 ( 12.6.2026 ) வெள்ளி கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ வைகாசி மாதம் { வ்ருஷப மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி~ மாலை 4.26 pm வரை த்வாதசி பின் த்ரயோதசி.
நாள் ~ ( ப்ருஹு வாஸரம் ) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ இரவு 1.48 am வரை பரணி பின் க்ருத்திகை.
யோகம் ~ அதிகண்டம்.
கரணம் ~ தைதுளை / கரஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 5.54.
சந்திராஷ்டமம் — கன்னி.
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ த்வாதசி.
இன்று ~ ப்ரதோஷம்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் – 12.6.2026
மேஷம்
ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். இளைய சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
அஸ்வினி : புதுமைகள் ஏற்படும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
கலகலப்பான பேச்சுகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நிர்வாகத் துறைகளில் மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : மதிப்பளித்து செயல்படவும்.
மிதுனம்
கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்கால சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபங்கள் அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். இணைய துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மிருகசீரிஷம் : ஈடுபாடு ஏற்படும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு உண்டாகும்.
புனர்பூசம் : கவலைகள் குறையும்.
கடகம்
வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகள் பற்றிய சில புரிதல்கள் ஏற்படும். சேவை துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். உடற்பயிற்சி விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நேர்மைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். குறுந்தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
புனர்பூசம் : புரிதல்கள் ஏற்படும்.
பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
ஆயில்யம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
சிம்மம்
பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தவறிப் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.
கன்னி
உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில உதவிகளில் கிடைப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகளால் நெருக்கடிகள் ஏற்படும். வாகன பயணங்களில் பொறுமையுடன் இருக்கவும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : அலைச்சல்கள் ஏற்படும்.
சித்திரை : கவனம் வேண்டும்.
துலாம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சித்திரை : தன்னம்பிக்கை உருவாகும்.
சுவாதி : எண்ணங்கள் கைகூடும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். அரசு விஷயங்களில் பொறுமை காப்பது நல்லது. உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : மாற்றம் பிறக்கும்.
அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.
கேட்டை : புரிதல் அதிகரிக்கும்.
தனுசு
வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பொன் பொருட்கள் சேரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் : பொறுப்புகள் மேம்படும்.
மகரம்
மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உத்திராடம் : மேன்மை ஏற்படும்.
திருவோணம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கும்பம்
போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நவீன தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். எதிலும் துரிதத்துடன் செயல்பட்டு முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : தேவைகள் நிறைவேறும்.
சதயம் : மாற்றங்கள் பிறக்கும்.
பூரட்டாதி : மனப்பக்குவம் ஏற்படும்.
மீனம்
பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்கள் வழியில் வரவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். கலை சார்ந்த பணிகளில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
பூரட்டாதி : வரவுகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : வித்தியாசமான நாள்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
இன்றைய சிந்தனைக்கு…
பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!





à®…à®°à¯à®®à¯ˆ. பகà¯à®•தà¯à®¤à®¿à®±à¯à®•௠பகà¯à®•ம௠படிகà¯à®•à¯à®®à¯ ஆவலைத௠தூணà¯à®Ÿà¯à®•ிறதà¯. உஙà¯à®•ள௠தினசரி வெறà¯à®±à®¿à®ªà¯†à®± வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯. ஆணà¯à®Ÿà®¾à®³à¯ திரà¯à®µà®Ÿà®¿à®•ளே சரணமà¯.
Good.
à®…à®°à¯à®®à¯ˆà®¯à®¾à®© பதிவà¯à®•ளà¯
Very nice
சரி யான நெதà¯à®¤à®¿à®¯à®Ÿà®¿
Crisp presentation of recent news.