பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

மாசி~ * 15 (27.2.2026) வெள்ளி* கிழமை.*
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ * மாசி மாஸம் { கும்ப மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 10.52 pm வரை ஏகாதசி பின் த்வாதசி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ 11.10 am வரை திருவாதிரை பின் புனர்பூசம்
யோகம் ~ ஆயுஷ் மான்
கரணம் ~ வணிஜை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.33
சந்திராஷ்டமம் — விருச்சிகம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி
இன்று ~ கரிநாள்
ஏகாதசி

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026

இன்றைய ராசிபலன்கள் – 27.2.2026


மேஷம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். உலோக தொடர்பான பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களின் பேச்சுகளுக்கு மதிப்புகள் மேம்படும். பலகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : இன்னல்கள் குறையும்.
பரணி : லாபங்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.


ரிஷபம்

ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதில் சில மாற்றமான வாய்ப்புகள் அமையும். விவசாய தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். செய்தொழில் குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கும். கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


மிதுனம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். ஆன்மிக செயல்களில் ஆர்வம் உண்டாகும். சமையல் பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் மனதில் ஒரு விதமான போராட்டங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். தந்தை வழியில் அனுசரித்து செல்லவும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


கடகம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மேன்மை உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
ஆயில்யம் : லாபம் கிடைக்கும்.


சிம்மம்

உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் அதிகரிக்கும். தந்தை பற்றிய புரிதல்கள் மேம்படும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். சிரமம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : ஆதரவான நாள்.
பூரம் : அறிமுகங்கள் அதிகரிக்கும்.
உத்திரம் : செல்வாக்குகள் மேம்படும்.


கன்னி

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். புதிய வாகனம் வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய் பற்றிய சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் காணப்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : புரிதல்கள் மேம்படும்.
அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


துலாம்

பெரியவர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். எண்ணிய சில வேலைகள் முடிவதில் அலைச்சல் உண்டாகும். தாய் வழி உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் சில மாற்றம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சித்திரை : அனுகூலம் உண்டாகும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : அனுபவம் ஏற்படும்.


விருச்சிகம்

குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்புகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் மனதளவில் தடுமாற்றம் ஏற்படும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

விசாகம் : பிரச்சனைகள் தீரும்.
அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
கேட்டை : உத்வேகம் பிறக்கும்.


தனுசு

மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். வழக்குப் பணிகளில் சாதகமான தீர்ப்புகள் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : ஆசைகள் மேம்படும்.
பூராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
உத்திராடம் : சாதகமான நாள்.


மகரம்

காப்பீட்டு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் மூலம் புதுமை பிறக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் மாற்றமான நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். கற்றல் திறனில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

உத்திராடம் : வரவுகள் மேம்படும்.
திருவோணம் : புதுமையான நாள்.
அவிட்டம் : குழப்பங்கள் நீங்கும்.


கும்பம்

மனை சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். பணி செய்யும் இடத்தில் பொறுப்புகள் குறையும். அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். விவசாய பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வியாபார நிமித்தமான பயணம் மேம்படும். முதலீடு சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : செயல்பாடுகளில் கவனம்
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


மீனம்

மனதளவில் இருந்து வந்த குழப்பம் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணம் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இணைய வழிகளில் வருமானம் மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : வருமானம் மேம்படும்.
ரேவதி : ஆதரவான நாள்.


தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

6 COMMENTS

  1. அருமை. பக்கத்திற்கு பக்கம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. உங்கள் தினசரி வெற்றிபெற வாழ்த்துக்கள். ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது.

பஞ்சாங்கம் – மார்ச் 04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

Topics

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது.

பஞ்சாங்கம் – மார்ச் 04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

T20 WC 2026: அரையிறுதிப் போட்டிகள் எப்படி?

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்பர் 8 ஆட்டங்கள் 02.03.2026முனைவர்...

பஞ்சாங்கம் மார்ச் 3 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

Entertainment News

Popular Categories