December 5, 2025, 4:10 PM
27.9 C
Chennai

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-ரிஷபம்

raghukethu-peyarchi
raghukethu-peyarchi

ராகு கேது பெயர்ச்சி  23.09.2020 5.56.10மணி முதல்  12.04.2022 இரவு 8.57.41 வரை..

ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)

அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.

லக்னம் 05.14(செவ்வாய்) 02.40ராகு 29.59.99 
   கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்கு  சுக்ரன் 25.05
(சனி) 01.14 
குரு 23.27சந்திரன் 29.44 கேது 29.59.99புதன் 01.20சூரியன் 06.48

ரிஷபம்
(கிருத்திகை 2,3,4, ரோஹிணி,
மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய)
50/100

ராகு ராசியிலும், கேது 7லும் சஞ்சாரம். ராசிநாதன் சுக்ரன் வலு, ஜனன ஜாதகத்தில் ராகு கேதுக்களின் பலம் அவர்கள் அமர்ந்த நக்ஷத்திராதிபதி பலம் நன்றாக இருந்தால் அடுத்த 18 மாதங்களுக்கு கெடுதல் இல்லை. மேலும் ராகு கேது சஞ்சரிக்கும் நக்ஷத்திராதிபதிகள் செவ்வாய், சுக்ரன், சூரியன், புதன், சனி,குரு இவர்கள் இந்த 18 மாத சஞ்சாரம் நன்றாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் கிடையாது. பொதுவாக ராகு ராசியிலும் கேது 7லும் சஞ்சரிக்கும் போது உடல் ஆரோக்கியம் பாதிப்படையும், முயற்சிகள் தோல்வி அடையும் வாழ்க்கை துணைவர் பிரிதல் ஜீவன வகையில் குறைவு என்று சொல்வர் ஆனால் மேற்படி நக்ஷத்திரக்கால்களில் பயணிக்கும் ராகு கேதுகள் செவ்வாய்,சுக்ரன்,சூரியன், புதன், சனி குரு பலனைத்தான் தரும். அவர்கள் நன்றாக இருப்பதால் பெரிய கெடுதல் கிடையாது.

குடும்பம் பொருளாதாரம் : 02.06.2021 வரை குரு பார்வை, புதன், சுக்ரன் சஞ்சாரம், சூரியனின் பலம் இவை நன்றாக இருப்பதால் வியாதிகள் கட்டுக்குள் இருக்கும். முயற்சிகள் மெதுவாக வெற்றிபெறும், பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். 12க்குடைய செவ்வாய் திருமணம் போன்ற சுப செலவுகளை தரும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு வாகனம் வாங்கும் யோகமும், குழந்தை பாக்கியம் ஏற்படலாம். 02.06.2021 – 09.02.2022 கொஞ்சம் சுமாராக இருக்கும் சனி குரு கொஞ்சம் சஞ்சலம் முன்னேற்ற தடையை கொடுப்பர், பொறுமை நிதானம், எதையும் யோசித்து செய்தல், பணத்தை சிக்கணமாக செலவு செய்தல் என்று இருந்தால் ஓரளவு நன்றாக இருக்கும். 09.2.22க்கு பின் நல்ல நிலை இருக்கும் வளர்ச்சி கூடும்.

உடல் ஆரோக்கியம் :  ஏற்கனவே இருந்து கொண்டிருந்த வியாதிகள் தொடரும், புதிதாக வாழ்க்கை துணைவர், பெற்றோர்கள் உடல் நலத்தில் பாதிப்பு இருக்கலாம் இது 09.02.2022 வரை இருக்கும். சரியான மருத்துவ சிகிச்சை, ஆகார கட்டுப்பாடு போன்றவை நலம் தரும். கவனமாக இருத்தல் அவசியம். மன சஞ்சலம் நீங்க இஷ்ட தெய்வ ப்ரார்த்தனை பலன் தரும்.

உத்யோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினருக்கும்): பொதுவாக இந்த 18 மாதங்களும் 12.04.2022 வரை கொஞ்சம் கடுமையாக உழைத்தால் முன்னேற்றம் காணலாம். ஜூன் 2021க்கு பின் ஜனன ஜாதகத்தில் 10,11,2,6 இடங்கள் வலுவாக உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு புதிய வேலை என்று கிடைக்கலாம். வாக்கு கொடுப்பது, கோபத்தில் சக தொழிலாளி, மேலதிகாரி இவர்களுடன் மோதல் போக்கை கொள்வது, நிர்வாக குறைகளை சக தொழிலாளியிடம் சொல்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது இது வேலை இழப்பை மட்டுமல்லாது வழக்கு என்று ஏற்பட்டு மன உளைச்சலை தரலாம். அதேநேரம் ஜாதகம் நன்றாக இருந்தால் நல்லபலன் கூடுதலாக இருக்கும்.

தொழில் (வியாபாரம், சொந்த தொழில், கலைஞர்கள், அரசியல்வாதி, விவசாயி) :

23.09.2021 – 02.06.2021 வரை சுமார் கொஞ்சம் கவனம் தேவை, கணக்குவழக்குகளை சரியாக வைத்து கொள்ளுதல், கடுமையான உழைப்பு, வாக்கு கொடுப்பதில் எச்சரிக்கை, புதிய திட்டங்களை ஒத்து போடுதல் என்று இருக்க வேண்டும், அதேநேரம் பொருளாதாரம் நன்றாக இருக்கும். பணத்தட்டுப்பாடு இருக்காது. செலவும் அதிகரிக்கும். ஜூன் 2021க்கு பின் பெயர்ச்சி முடியும் வரை நன்றாக இருக்கும் புதிய தொழில் விஸ்தாரணம் நன்மை தரும். பணப்புழக்கம் தாராளம், வங்கி கடன்கள், புதிய வாய்ப்புகள், எதிலும் வெற்றி என்று இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் நிதானம் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. பெரிய பிரச்சனைகள் இருக்காது பரவாயில்லை என்று சொல்லும் பெயர்ச்சி

மாணவர்கள் :   தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் மட்டுமே நன்மைகள் அதிகம், புதன் சஞ்சாரம் ஓரளவு நன்மை தரும். இருந்தாலும் ஆசிரியர் பெற்றோர் அறிவுரை படி நடப்பது நல்லது. மற்ற சுக்ரன், குரு, செவ்வாய் நன்மைகளை தருவதால் போட்டி பந்தயங்களில் வெற்றி, வெளிநாட்டு படிப்பு முயற்சி வெற்றி பெறுதல் எதிலும் தேர்ச்சி என்ற நிலை இருக்கும். பொதுவில் இந்த பெயர்ச்சி ஓரளவு நன்மை தரும்.

சர்வே ஜனா சுகினோ பவந்து:

lakshmi narasimhachari

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories