Author: செந்தமிழன் சீராமன்
Breaking News
சென்னையில் 3 பேருந்துகளின் வழித்தடம் மாற்றம்
சென்னையில் 3 பேருந்துகளின் வழித்தட எண் வரும் 20ஆம் தேதி முதல் மாற்றம் பெறுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
நாளை முதல் செல்போனிலேயே எடுக்கலாம் முன்பதிவில்லா ரயில் பயணச்சீட்டு
இந்த செயலியில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கிமீ தொலைவு வரையுள்ள பகுதிகளில் இருந்து பயணச்சீட்டை எடுத்துக் கொள்ளலாம். பயணச்சீட்டு எடுக்காத பயணிகள், டிக்கட் பரிசோதகரைப் பார்த்த பின் பயணச்சீட்டைப் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் இந்தச் செயலியில் பயணச்சீட்டு எடுக்க இயலாது. இந்த பயணச்சீட்டை sms மூலம் மற்றவருக்கும் அனுப்ப இயலாது.
மத்திய அரசின் மீது கடும் விமர்சனம்: அதிமுக., நாளிதழின் அரசியல் களன்!
இனியாவது தாமரை கட்சிக்கு புரியட்டும், தமிழினத்தின் தன்மானம் குன்றாத வியப்பு’ என பாரதிய ஜனதா மற்றும் மத்திய அரசுக்கு நமது அம்மா நாளேடு கட்டுரை மூலம் ஆளும் அதிமுக விமர்சனம் மூலம் சுட்டிக் காட்டியுள்ளது
பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக ஆளுநர் உறுதி: சந்திப்புக்குப் பின் மு.க.ஸ்டாலின் தகவல்
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மே 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அதுவரையில் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்காமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முழு முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.
அல்ஜீரியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 257 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த வீரர்கள், விமானிகள் என 257 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வட மாநில போராட்டங்களால் ரயில் சேவை பாதிப்பு
பல்வேறு கட்சியினர் அறிவித்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் பல ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
வெற்றிகரமாகப் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்: ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தம்
இது புவியில் இருந்து அதிகபட்சம் 36 ஆயிரம் கி.மீ. தொலைவும், குறைந்தபட்சம் 170 கி.மீ., தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் புவியைச் சுற்றிவரும். ஜிசாட்- 6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கிறிஸ்துவ நம்பிக்கையை இளையராஜாவிடம் எதிர்பார்ப்பது ஏன்?
ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கிறிஸ்துவ நம்பிக்கையை இளையராஜாவிடம் எதிர்பார்ப்பது ஏன் என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர் சமூக ஊடகங்களில்!ஒரு கிறிஸ்துவர் இப்படி எழுதியிருக்கிறார்...இயேசு உயிர்த்தெழுந்தார் என்று நாம் நம்புகிறோம் ,, ஏனென்றால் நாம் கிறிஸ்தவர்கள், ஆனால் இளையராஜாவும் நம்பி அப்படி சொல்ல என்ன இருக்கின்றது..
குற்றவாளி என்றதால் ஜெ.வுக்கு மன அழுத்தம் அதிகரித்தது; ஸ்டிராய்டு மருந்துகளும் எடுத்துக் கொண்டார்: சசிகலா!
தனக்கு உடல் நிலை மோசமாக இருந்ததால்தான், வெகு தொலைவில் போட்டியிடாமல், அருகில் உள்ள ஆர்.கே.நகரில் போட்டியிட்டார் ஜெயலலிதா என்றும், நான் நலமோடு இருக்கிறேன். சில நாட்கள் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், நாம் வீட்டிற்கு சென்று விடலாம் என ஜெயலலிதா செப்டம்பர் 27ஆம் தேதி கூறினார் என்றும் சசிகலா இந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்..
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திய 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!
கடந்த 2014 முதல் 39 இந்தியர்கள் ஈராக்கில் சிக்கி தவித்தனர். இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் தெளிவாகத் தெரியாத நிலையில் இருந்தது. ஆனால், மொசூல் அருகே பாதுஷா சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இந்த சிறையை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்ரவாதிகள் தகர்த்து விட்டதாகக் கூறப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: மத்திய அரசுக்கு கெடு விதித்த ஓ.பன்னீர்செல்வம்
இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதால் மத்திய அரசு கவிழ்ந்து விடாது, ஆனாலும் மத்திய அரசுக்கு பெரும் அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்று சட்டப் பேரவையில் வலியுறுத்தினார் மு.க.ஸ்டாலின்.
சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி!
வனத்துறையின் முழுக்கட்டுபாட்டிலுள்ள இம்மலையில் முக்கிய நாள்களில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை அமாவாசை என்பதால்,
