பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக ஆளுநர் உறுதி: சந்திப்புக்குப் பின் மு.க.ஸ்டாலின் தகவல்

m k stalin dmk - 2026

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, பிரதமரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக ஆளுநர் உறுதி அளித்ததாக செய்தியாளர்களிடம் கூறினார் மு.க.ஸ்டாலின்!

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை ஆளுநரை சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். அவருடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இன்று தமிழக ஆளுநரை சந்தித்து அனைத்துக் கட்சி சார்பில் இது குறித்து தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.

இது குறித்து ஆலோசிக்க, தமிழக முதல்வரிடம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், சட்டமன்றத்தையும் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினோம். மேலும், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. எனவே ஆளுநராக இருக்கும் நீங்கள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியுமா என்று இந்த சந்திப்பின் போது கேட்டதற்கு, நிச்சயமாக உங்கள் உணர்வை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எனவே பிரதமருடன் உங்களது சந்திப்பு நிகழ ஏற்பாடுகளை செய்வேன் என்று ஆளுநர் உறுதி அளித்தார் எனக் கூறினார் ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories