
-> செல்வ நாயகம்
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்…! பாகிஸ்தானி இந்தியாவை உளவு பார்க்க உதவிய விவகாரத்தில் சிக்குகிறாரா ஹிந்து விரோதி ஹமீது அன்சாரி?
1, நுஸ்ரத் மிர்சா என்ற பாகிஸ்தான் நிருபர் சமீபத்தில் பாகிஸ்தான் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்… “2005 – 2011 காலகட்டத்தில் பல முறை இந்தியா சென்றேன் (சென்னை உட்பட). அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீது அன்சாரியை சந்தித்திருக்கிறேன் – பயங்கரவாதம் பற்றிய கூட்டத்தில் அவரோடு பங்கெடுத்தேன் 2010இல். (இந்து விரோத) மில்லி கெசெட் ஊடகத்தின் தலைவன் சஃபருல் இஸ்லாம் கான் போன்றோரையும் சந்தித்திருக்கிறேன். இந்தியாவில் உளவு பார்த்து, அந்த விவரங்களை நம் ஐ.எஸ்.ஐக்கு தெரிவிப்பது என் வழக்கம். நாம் முகலாயர்கள். இந்தியாவை பல ஆண்டுகள் ஆண்டவர்கள். இந்தியாவின் 15 மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன் நான். இந்தியாவை உடைக்கும் குறிக்கோளுடன் 26 பிரிவினைவாத இயக்கங்கள் இயங்கிவருகின்றன. ஒரு சிலர் 67 பிரிவினைவாத இயக்கங்கள் உள்ளன என்கிறார்கள். நாம் (பாகிஸ்தானிகள்) முகலாயர்கள் என்பதால், இந்தியா நம்மை அழிக்க நினைக்கிறது. இந்திய அரசு இந்தியாவிலிருக்கும் முசுலிம்களைக் கொல்ல நினைக்கிறது” என்றெல்லாம் பேச, அது இந்தியாவில் பெரிய பிரச்சினை ஆனது. ( பார்க்க… Pakistani journalist claims he had spied on India during visits, was invited by Hamid Ansari and passed information to Pak Army )
2, 85 வயதாகும் ஹமீது அன்சாரி 1961இல் இந்திய வெளியுறவு சேவையில் (Indian Foreign Service – IFS) சேர்ந்த அரசு ஊழியர். ஷியா பிரிவு. வாஜ்பேயி காலத்தில் ஈரானில் வெளியுறவு விவகாரங்களை கவனித்த அன்சாரி அங்கே ஈடுபட்ட ஊழல்கள் பல. அன்சாரியை 2007இல் துணை ஜனாதிபதியாக்கியது சோனியாவின் யுபிஏ அரசு. 2017இல் – நரேந்திர மோதி ஆட்சியில் – ஓய்வுபெறும் போது அன்சாரி, “இந்தியாவில் சகிப்புத் தன்மை இல்லை” என்று கூக்குரலிடுகிற அளவுக்கு மத வெறியனாகத் திகழ்ந்தவர்.
3, பாகிஸ்தான் ஊடக வியாபாரி நுஸ்ரத் மிர்சா பேசிய விவகாரம் இந்தியாவில் பெரிதாக வெடித்தது. “நம் விரோதி இந்தியாவில் உளவு பார்க்க துணை ஜனாதிபதி பொறுப்பில் இருந்த அன்சாரி எப்படி உதவலாம்? வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்று பாஜக.,வினர் உட்பட பலர் குரல் எழுப்பினர்.
4, விஷயம் பெரிதானதும், அன்சாரி, “எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. வெளியுறவுத் துறைதான் இவர்களுக்கு விசா கொடுக்கிறது. அவர்களைக் கேளுங்கள்” என்று நழுவ முயற்சித்தார்… ( Hamid Ansari throws UPA govt under the bus in Pakistani journalist espionage row, says foreign invitees selected by MEA )
5, ஹமீத் அன்சாரியின் நழுவலுக்கு காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் வந்து ஆதரவாக அறிக்கை விட்டனர். அதோடு நிறுத்தாமல், “அந்த செமினாரை நடத்தியது டாக்டர் ஆதிஷ் அகர்வாலா என்கிற மோதி ஆதரவாளர் தான். அவரைக் கேளுங்கள்” என்று கூறினார். அதன் விளைவு…?
6, டாக்டர் ஆதிஷ் அகர்வாலா அறிக்கை வெளியிட்டார்… “ஜெய்ராம் ரமேஷ் அறிக்கையில், டாக்டர் அகர்வாலா நடத்திய International Conference of Jurists on International Terrorism & Human Rights செமினாருக்குதான் மிர்சா வந்தான் என்று சொல்லியிருக்கிறார். அந்த செமினாரை டிசம்பர் 2010இல் நடத்தியவன் என்ற முறையில் விவரங்களை தெளிவாக்க வேண்டியது என் கடமை (படம்).
அந்த செமினாருக்கு பாகிஸ்தானி மிர்சாவை ஹமீத் அன்சாரி எங்களை அழைக்கச் சொல்லி வற்புறுத்தியும் நாங்கள் மிர்சாவை அழைக்கவில்லை, மிர்சா பங்கெடுக்கவும் இல்லை. செமினாரில் ஒரு மணி நேரம் பங்கெடுக்காமல், கோபத்தில் வெறும் 20 நிமிடங்களில் கிளம்பிச் சென்றார் அமீது அன்சாரி. மேலும், தன் நேர்காணலில் மிர்சா இந்த செமினார் பற்றியும் ஏதும் சொல்லவில்லை. மிர்சா குறிப்பிட்டது ‘International Conference against Terrorism’ என்ற செமினாரை. அதை அக்டோபர் 2009இல் ஓபராய் ஹோட்டலில் நடத்தியவர்கள் ஜமா மஸ்ஜித் ஆட்கள். அதில் பங்கெடுத்தவர்கள் ஹமீது அன்சாரி, மிர்சா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட முசுலிம்கள். 2009இல் மிர்சா பங்கெடுத்த கூட்டத்தை 2010இல் நான் நடத்திய கூட்டத்துக்கு மடைமாற்ற முயற்சிக்கிறார்கள் ஹமீது அன்சாரி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸார். ஆதாரத்துக்கு, 2009 ஜமா மஸ்ஜித் கூட்டத்தில் அன்சாரியும் நுஸ்ரத் மிர்சாவும் இருக்கும் புகைப்படத்தை இத்துடன் வெளியிட்டுள்ளேன். இது பற்றி விசாரணை அமைக்க மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். தேசதுரோகம் பற்றி அன்சாரி விசாரிக்கப்பட வேண்டும். ” என்று குறிப்பிட்டார்.
*அன்சாரி ஏற்கெனவே ராஜ்யசபா டிவி விவகாரத்தில் மூவாயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்து சிக்கியது பழைய கதை…!
PRESS STATEMENT
HAMID ANSARI PUTTING UP SPURIOUS DEFENCE TO CONCEAL TIES WITH PAK SPY NUSRAT AND TO MALIGN THE PM: ICJ PRESIDENT & CO-AUTHOR OF PM BIOGRAPHY DR. ADISH C. AGGARWALA