spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைபெங்களூர் ... டிபென்பாக்ஸ் குண்டு வெடிப்பு அல்ல! அப்படி என்றால்..?!

பெங்களூர் … டிபென்பாக்ஸ் குண்டு வெடிப்பு அல்ல! அப்படி என்றால்..?!

- Advertisement -

நடந்தது வெடிகுண்டு….!?!? தான் என்கிறார் சித்தராமையா. சம்பவம் நடைபெற்ற பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குறுகிய காலத்தில் மிகப் பெரிய பெயர் பெற்ற உணவகமாக உருமாறி நிற்கிறது. இங்கு கடந்த ஒன்றாம் தேதி ஓர் வெடிப்பு சம்பவம் நடந்தது…, யார் செய்திருக்கிறார்கள் ஏன் செய்தார்கள் என விசாரணை முடிக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில அரசும் மத்திய அரசு அதிகாரிகளும் தெரிவித்திருக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க…… மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக உள்ள சித்தராமையா… தமிழகத்தில் உள்ள முதல்வரை போல் சிலிண்டர் வெடிவிபத்து என சப்பைக்கட்டு கட்டவில்லை….. மாறாக இது குறித்து ஆராய பெரும் முனைப்பு காட்டி வருகிறார். இதன் பின்னணியில் உள்ளவர்களின் நோக்கம் அல்லது அவர்கள் ஏன் இதனை இந்த ராமேஸ்வரம் கஃபே இடத்தில் செய்திருக்கிறார்கள் என்பதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அங்கு தமிழகத்தில் உள்ளது போன்ற அடையார் ஆனந்த பவன் ஏ2பி போல் வளர்ந்து நிற்கும் ஒரு உணவகம் தான் இங்கு இந்த ராமேஸ்வரம் கஃபே. கிட்டத்தட்ட அதே பாணியிலான… ஆரம்ப கால சரவணபவன் போல் இதன் தற்போதைய நிர்வாகம் இயங்கி வருகிறது இங்கு. பல தமிழ் பேசும் மக்களை வெகு சகஜமாக இங்கு காணலாம். ஓர் வகையில் சொன்னால் தமிழர்கள் கூடிய குசலம் விசாரிக்கும் இடமாகவே பார்க்கப்படுகிறது.இது வரையில் எல்லாம் சரி……. குண்டு வெடிப்பு நிகழ்த்தும் அளவிற்கு என்ன நடந்தது…..????

பல விசாரணை அமைப்புக்களுக்கு நன்கு அறியப்பட்ட சமாச்சாரம் தான் என்கிறார்கள் ஒரு சாரார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே நீறுபூத்த நெருப்பாக இருந்த விஷயம் தான்…,. பிரதமரை கொண்டாட தயங்காத இவர்களுக்கு உள்ளுர் கட்சியினரை கண்டாலேயே ஆகாது…… அந்த அளவிற்கு வீரதீர பராக்கிரமங்களை அவர்களும் இங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் பல இடங்களில் இஸ்லாமிய பெருமக்களை….. அவர்களின் சமுகங்களை கொண்டிருந்த பூத்களில் அவர்களுக்கு பதிலாக அங்கு இருந்த ஒரு சில நபர்களே வாக்குகளை பதிவு செய்து இருக்கிறார்கள். இஃது கிட்டத்தட்ட சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி போலான பாணியில் நடந்தது என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கும்…… இந்த சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்?????? இருக்கிறது கொஞ்சம் நுட்பமாக அவதானிக்க வேண்டும். சமீபத்தில் நடந்த பாரதப் பிரதமரின் தமிழக வருகையை ஒட்டிய நிகழ்வுகளை இங்கு வைத்து பேசிய ஒரு சாராருக்கு ஆதரவாக இந்த உணவக கிளை சார்பாக நடந்துக் கொண்டார்கள் என்றும்….. அதனை முளையிலேயே கிள்ளி களைவதற்காக இதனை இவர்கள் தான் செய்திருக்கக்கூடும் என முனுமுனுப்பு எழுந்துள்ளது. இஃது பெங்களூரு முழுவதும் ஓர் விதமான அசூசை பார்வையை அவர்கள் மீதே பதிந்துள்ளது.

இஃது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்து விடக்கூடாது என்பதில் சித்தராமையா பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும்…. அநேகமாக பல கடுமையான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளக்கூடும் என்கிறார்கள். இதனை நேற்றைய வெள்ளிக் கிழமை கூடிய கூட்டங்களில் பெரும் விவாதப்பொருளாகி இருக்கிறது…… அநேகமாக படிக்கும் உங்களுக்கும் இது புரிந்திருக்கும் என்றே நம்புகிறோம்……. தீப்பொறியை உரசி இருக்கிறார்கள்…. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

– ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe