ஃபேஸ்புக்கை பயன்படுத்தி துப்பாக்கி விற்பனையில் ஈடுபடுவர்களை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக இணைய தளமான ஃபேஸ்புக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு இமெயில் மூலம் பதிலளித்த ஃபேஸ்புக் நிறுவன அதிகாரி ஒருவர், சமூக இணைய தளமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்தி, தனியார் சிலர் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதை தடுக்கும் நோக்கில் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டுபவர்களின் ஃபேஸ்புக் கணக்கை முடக்கும் வகையில் பேஸ்புக்கை கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

