உற்றான் நாயகன் பெயர் காரணம்! டிஎஸ்ஆர் சுபாஷ்!

r v uthakumar - 2026

உற்றான் படத்தின் ஆடியோ டிரைலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

சாய் சினிமாஸ் தயாரிப்பில், ஓ.ராஜா கஜினி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் உற்றான். கடந்த 1994 சென்னையில் ஒரு கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார் இளம் நாயகன் ரோஷன்.

இவர் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான ரவீந்திர தாஸின் பேரனும், தற்போதைய தலைவரும், பிரபல திரைப்பட படத்தொகுப்பாளருமான, தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷின் மகன். உற்றான் படத்தின் மூலம் அறிமுகம் ஆகும் ரோஷனின் முழு பெயர் ரோஷன் உதயகுமார்.

விழாவில் பேசிய டிஎஸ்ஆர் சுபாஷ், என்னை கலையுலகில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்தான் அதன் காரணமாகவே என்னுடைய மகனுக்கு உதயகுமார் என்று பெயர் வைத்தோம்.

என்னுடைய இயக்குனரின் பெயரை வைத்ததால் என் மகனுக்கு வைத்தாலும் என்னால் பெயர் சொல்லி அழைக்க முடியவில்லை. வீட்டில் செல்லமாக ரோஷன் என்று கூப்பிட்டோம். இயக்குநர் பெயரை சொல்லி நான் இன்றுவரை என் மகனை அழைத்ததே இல்லை. ரோஷன் உதயகுமார் என்று மாற்றி முறையாக பள்ளியில் பதிவு செய்தோம்.

uttran 2 - 2026

பள்ளி முதல் பாஸ்போர்ட் வரை ரோஷன் உதயகுமார் என்றே உள்ள நிலையில், தற்போது உற்றான் படத்தின் மூலம் அறிமுகம் ஆகும் சூழலில், படத்தில் எப்படி பெயர் போடலாம் என்று வரும்போது, என் இயக்குனர் உதயகுமார் சாரிடம் கேட்டேன். அவர் ரோஷன் என்பதே நன்றாக உள்ளது என்று சொன்னார். அந்த பெயரை வைத்து விட்டோம் என்றார். அதைக்கேட்டு ஆர்.வி உதயகுமார் நெகிழ்ச்சியடைந்தார்.

விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், எங்களுடைய குடும்ப நண்பர் ரவீந்திர தாஸ். அவரை நான் டாடின்னும், அம்மாவை மம்மின்னும்தான் எப்பவும் கூப்பிடுவேன். அவர் தான் எனக்கு சிறு வயதில் இருந்தே குரு. நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே அவரது எழுத்துக்களை படித்துப்பார்த்து வளர்ந்தேன். பாடல்கள், கவிதைகளையயும் எழுதத் தொடங்கினேன்.

பின்னாளில், ரவீந்திரதாஸ் சாரின் மகனான தோழர் சுபாஷுக்கு நான் குருவாக ஆனேன். அதனால் தானோ என்னவோ, அவரது மகனுக்கு என்னுடைய பெயரையும் சேர்த்து ரோஷன் உதயகுமார் என்று பெயர் வைத்துள்ளார். அது எனக்கு கூடுதல் பெருமை. இந்த பெயரை வைத்தது ரவீந்திரதாஸின் நெருங்கிய நண்பர் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்தான்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories