சத்யா – சைலண்ட் கில்லர்

நாயகனுக்கு பிறகு கமல் நடிப்பில் வந்த அருமையான படம்  சத்யா . அந்த பெயரை சிபி படத்துக்கு போய் வைத்து விட்டார்களே என்கிற ஆதங்கம் இருந்தாலும் , தெலுங்கில் ஏற்கனவே ஹிட் அடித்த படத்தையே தமிழில் ரீ மேக்கியிருக்கிறார்கள் என்பதும் , படத்தை பற்றிய பாசிட்டிவ் டாக்கும் ஆறுதல் …

கழட்டி விட்ட ஃபிகர் பக்கத்து ஊருக்கு கூப்பிட்டாளே போகாத நம்ம ஊரு பசங்க மத்தியில் முன்னாள் காதலியின் கிட்னாப்  செய்யப்பட  குழந்தையை காப்பாற்ற ஃபாரீனிலிருந்து இந்தியா திரும்புகிறார் சத்யா ( சிபி ) . குழந்தையை காப்பாற்ற போலீசும் , புருசனும் எந்தவிதத்திலும் உதவாத நிலையில் காதலி ஸ்வேதா  ( ரம்யா ) வுக்காக சிபி சந்திக்கும் திடுக் திடுக் திருப்பங்களே சத்யா …

சிபி சத்யராஜின் சின்ன வயசு ஜெராக்ஸ் போலவே இருக்கிறார் . படம் நெடுக ஸ்டிஃபாகவே இருப்பவர் காதல் காட்சிகளிலாவது  கொஞ்சம் கேசுவலாக இருந்திருக்கலாம் . டைட்டிலை போலவே படம் நெடுக இவர் ஷோல்டரிலேயே பயணம் செய்கிறது . சிபி யும் சிம்பிலாக நடித்திருந்தாலும் நம்மை ஏமாற்றவில்லை . ரம்யா க்யூட்டான ஹெச்.ஆர் ஆக வந்து நிறைய நிறைய ஐடி காரர்களை பெருமூச்சு விட வைக்கிறார் . மகளை கண்டுபிடிக்க சொல்லி சிபி இடம் அழும் இடத்தில் நடிப்பு மிளிர்கிறது …

S1 - 2026

ஐ.டி எம்ப்ளாயியாக யோகி பாபுவை பார்க்கும் போதே சிரிப்பு வருகிறது . சதீஷ் ஜாலியாக பேசும் போது  வராத சிரிப்பு கன் னை எடுத்து தலையில் வைக்கும் போது  வந்து தொலைக்கிறது . ஆக்சுவலி  காப் ஆனந்தராஜ் சீரியஸான படத்தில் சின்ன சின்ன தாக ரிலாக்ஸ் செய்கிறார் . ஏ.சி.பி யாக வரும் வரலக்ஷ்மி டைட்டான ட்ரெஸ்ஸில் ரிலாக்ஸாக நடித்திருக்கிறார் . சைமனின் பின்னணி இசை படத்துக்கு பலம் …

சைத்தானில் சறுக்கிய இயக்குனர் பிரதீப் சத்யா வில் ஸ்டடியாகியிருக்கிறார் . படம் இடைவேளை வரை அடுத்து என்ன என்கிற ஆர்வத்தை நமக்கு கொடுத்துக்கொண்டே போகிறது . இண்டெர்வெல் ப்ளாக் சரியான இடத்தில் வந்து நம்மை நிமிர வைக்கிறது . இண்டெர்வெலில் ஒரு சாண்ட்விட்ச்சை முடித்து விட்டு வந்து உட்காரும்  போது  ” என்ன இது நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு ” என்று வடிவேலு போல புலம்ப வைத்தது துரதிருஷ்டம் …

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

குழந்தை ஏன் காணவில்லை என்பதற்கான முடிச்சுகளை பல இடங்களில் இருந்து போட்டு யோசிக்க வைத்தவர்கள் அதை அவிழ்க்கும் போது இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் . பாலாஜி , சதீஸ் என்று நிறைய உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் . ரியாலிட்டியோடு நகரும் படம் சிபி போலீஸ் ஆனந்தராஜி டம் வா , போ என்று சவடாலாக பேசும் போது சறுக்கிறது . தன்னை கொல்ல வந்தவனை பிடித்து விசாரிக்காமல் சிபி சுட்டு கொல்வது , கடத்தப்பட்ட குழந்தை அம்மாவை தேடி அழாமல் கேசுவலாக இருப்பது , குழந்தைக்காக செய்யப்படும் கொலைகள் என்று லாஜிக் லூப்ஹோல்ஸ் இருந்தாலும் க்ரிப்பான திரைக்கதையால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வந்திருக்கும் சத்யா சைலண்ட் கில்லர் …

ஸ்கோர் கார்ட் : 42 

ரேட்டிங்க் : 3 * / 5 * 

விமர்சனம் : அனந்த் நாராயணன் (பேசலாம் ப்ளாக்கலாம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories