December 5, 2025, 8:10 PM
26.7 C
Chennai

விமர்சனம்: கோடியில் ஒருவன்!

kodiyil oruvan
kodiyil oruvan

~ டி.எஸ்.வேங்கடேசன் ~

செந்தூர் பிலிம இண்டர்நேஷனல் தயாரிப்பில்  ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடித்து ஓடிக் கொண்டிருக்கும் கோடியில் ஒருவன் தாயின் சபதத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் மகன், எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டது.

கம்பம் அருகே மலைக்கிராமத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர் உள்ளிட்ட பல வீடுகளில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு சமூக ஆர்வம் உள்ளது. அரசியல் பிரமுகரின் ஆணைப்படி அவர் பஞ்சாயத்து தலைவராகிறார்.

kodiyil oruvan1
kodiyil oruvan1

மக்களுக்கு நலனுக்காக ஊழல் செய்யாமல் செயல்பட்டு பாராட்டை பெறுகிறார். பணம் கிடைக்காத ஆத்திரத்தில் அரசியல் பிரமுகர் கர்ப்பிணியான அந்த பெண் மற்றும்அவரது கணவரை ஆள்வைத்து கொலை செய்ய முயற்சிகிறார். தீவைக்கப்பட்ட அப்பெண் ஆற்றில் குதித்து உயிர் தப்பிக்கிறார்.  மகன் பிறக்கிறான்.

பல வீரகதைகளை கூறி அதிகாரம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரியாகி இவர்களை தண்டிக்க வேண்டும் என கூறி வளர்க்கிறார். அப்போதுதான் வீட்டை விட்டு வெளியே வருவேன் என்ர சபத்தையும் மகனிடம் கூறுகிறார்.

kodiyil oruvan2
kodiyil oruvan2

நன்றாக படித்து ஆண்டனி சென்னைக்கு ஐ ஏஎஸ் தேர்வு பயிற்சிக்காக வந்து குடிசை மாற்றுவாரிய வீட்டில் குடியேறுகிறார். சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து, ரவுடித்தனம் செய்துவரும் இளைஞர்களுக்கு இலவச டியூஜன் எடுத்து படிக்க வைக்கிறார். பகுதி மக்களின் அன்பை பெறுகிறார்.

அரசியல்வாதிகள் எவ்வித திட்டத்தையும் செலவு  செய்யாமல் லட்சக்கணக்கில் கொள்ளை அடிப்பதை கண்டு வெகுண்டு எழுகிறார்.  ஜஏஎஸ் தேர்வுக்கு செல்லும் போது ரவுடிகளால் தாக்கப்படுகிறார்.  சான்றிதழ்களை அவர்கள் கிழித்துப் போட்டு விடுகின்றனர். தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரின் மிரட்டலுக்கு உள்ளாகிறார். அப்பகுதியை சொர்க்க புரியாக மாற்றுகிறார்.

kodiyil oruvan3
kodiyil oruvan3

கட்டாயப்படுத்தி பதவியை ராஜினாமா செய்யவைக்கின்றனர். சட்டப் பேரவை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். பெரும்பான்மைக்கு அவரது உதவி தேவைப்படுவதால் முதல்வர் பதவியை கேட்கிறார்.  முதல்வராகிறார். கிராமத்துக்கு வந்து தாயை அழைத்து செல்கிறார்.

உள்ளூர் அரசியல்வாதி உள்பட பலர் கைதாகின்றனர்.  ஐஏஎஸ் கனவுடன் தாயின் கனவை நிறைவேற்ற வந்த  விஜய் ஆண்டனி அரசியல்வாதி ஆகிறார். இதுதான் கதை சுருக்கம். சண்டை காட்சிகள், காதல், நகைச்சுவை காட்சிகள் எனபடம் செல்கிறது. ஆபாச வசனங்களை தவிர்த்திருக்கலாம்.

kodiyil oruvan4
kodiyil oruvan4

ஆண்டனியின் காதலியாக ஆத்மிகா, அம்மாவாக திவ்ய பிரபா, கேஜிஎப் படத்தில் நடித்த ராமசந்திர ராஜூ வில்லானாக ( ஆளும் கட்சியின் மாவட்ட தலைவராக) நடித்துள்ளனர். இரண்டாவது வில்லனாக சூப்பர் சுப்பராயன் கவுன்சிலராக வந்து பேச்சிலேயே அதிரடி காட்டுகிறார். அவரது அடியாளாக சூரஜ் போப்ஸ், பாகுபலி பிரபாகர், பூராம் என ஏராளமான வில்லன்கள்.  நிவாஸ் கே பிரசன்னா பின்னணி இசை அமைத்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் உதயகுமாரின் கேமார அசத்துகிறது.  ஒரு தாய் நினைத்தால் அவரது பிள்ளைகளை எப்படி சக்திமிக்கவனவாக, பொறுப்புள்ளவனாக வளர்க்க முடியும் என்பதை கதை உணர்த்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories