விஜய் சேதுபதி – ரம்யா நம்பீசன் மீண்டும் இணையும் புதுப் படம்!

Published:

vijaysethupathi-ramyanambisan விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவந்த படம் ‘பீட்சா’. இப்படத்தை கார்த்திக் சுப்ராஜ் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இதில் விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் இருவரும் நன்கு நடித்திருந்தனர். இதை தொடர்ந்து விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் ஜோடி மீண்டும் புது படம் ஒன்றில் இணையவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய எஸ்.யூ.அருண்குமார் இயக்குகிறார். இப்படம் காக்கிச்சட்டைக்கு உரிய கம்பீரத்தையும், நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு போலீஸ்காரரின் யதார்த்த கதையாக உருவாக்க இருக்கிறார்கள். நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இப்படத்தை வாசன் மூவீஸ் சார்பாக ஷான் சுதர்ஷன் முதல் படமாக இப்படத்தை தயாரிக்கிறார். மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img