சுபாஷிதம்: ஆறுவித சுகங்கள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

19. ஆறுவித சுகங்கள்!

ஸ்லோகம்:

ஆரோக்யமான்ருண்யமவிப்ரவாச: சத்பிர்மனுஷ்யை: சஹ சம்ப்ரயோக:|
ஸ்வப்ரத்யயா வ்ருத்திரபீதிவாச: ஷட்ஜீவலோகஸ்ய சுகானி ராஜன்||

மகாபாரதம்

பொருள்:

ஆரோக்கியம், கடன் இன்றி வாழ்வது, வயிற்றுப் பிழைப்புக்காக வெளிப் பிரதேசங்களுக்கு செல்லத் தேவை இல்லாமல் இருப்பது (இருக்கும் இடத்திலேயே பணிபுரிவது),  நல்லவர்களோடு சகவாசம், தன்னம்பிக்கையோடு வாழும் முறை, அச்சமின்றி வசிப்பது – இந்த ஆறும் மனிதனுக்கு சுகம் விளைவிப்பவை.

விளக்கம்:

சுகமாக வாழ வேண்டும் என்று நினைக்காவர் யார்? ஆயின், சுகம் என்றால் என்ன?  மனிதனுக்கு இருக்கக்கூடிய சுகங்கள் ஆறு என்று கூறிய விதுரநீதி இந்த ஸ்லோகம்.

ஆரோக்கியமே மகாபாக்கியம்! உடல்நிலை சரியில்லாத போதுதான் ஆரோக்கியத்தின் மதிப்பு தெரிய வரும். வியாசர் முதன்மையாக ஆரோக்கியத்தை குறிப்பிட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

இனி, அடுத்து கடனில்லாத வாழ்க்கை. கடன் இல்லாதவனே பெரும் செல்வந்தன் என்பது பழமொழி. வரவுக்கு மிஞ்சிய செலவு செய்யாமல் இருப்பதே சுகம். நல்ல சகவாசம், நல்லவர்களோடு நட்பு ஒரு சுகம். அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.

அடிக்கடி செல்லும் பயணத்தால் ஆரோக்கியம், யோகாப்பியாசம் போன்றவை தடைப்படும். அதனால் அது குறித்துக் கூறியுள்ளார். வேலைக்காக குடும்பத்தை விட்டு தொலைவாக வசிப்பது, வயிற்றுப் பிழைப்புக்காக தொலைதூரப் பயணம் போன்றவை சுகத்தை அளிக்க மாட்டா. வேலையைப் பற்றிக் கூட இந்த ஸ்லோகத்தில் உள்ளது.

வாழ்க்கை வழிமுறை தன்னம்பிக்கையோடு கூடியதாக இருந்தால்தான் அது சுகத்தை அளிக்கும். அச்சமில்லாத வாழ்க்கைக்கு நம் வசிப்பிடம் தடையாக இருக்கக்கூடாது என்று இந்த ஸ்லோகம் அறிவுறுத்துகிறது. ஜன சஞ்சாரம் இல்லாத இடத்தில் இருக்கும் வீடு, ஆபத்துக்கு அருகாமையில் இருக்கும் வீடு போன்றவை வசிப்பதற்கு ஏற்றவையல்ல.

இவ்விதம் மனித வாழ்க்கைக்குத் தேவையான ஆறு சுகங்களை இந்த ஸ்லோகம் பேசுகிறது.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories