ஓவியாவை வளைத்துப் போட்ட ஸ்டாலின்!

oviya 90ml
oviya 90ml

சினிமாவில் தன்னைக் காட்டி மக்களிடம் பெற்ற புகழை அரசியலுக்கு பயன்படுத்துவது சாதாரணமான ஒன்றுதான். இதில் வென்றவர்கள் சிலர். சினிமாவில் பெற்ற புகழையும் இழந்து நடுத்தெருவில் நின்றவர்கள் பலர்.

இப்போது இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறார் ‘பிக்பாஸ்’ தொடரில் செண்டிமெண்ட் டச் கொடுத்து நடித்துப் புகழ்பெற்ற ஓவியா. இவரும் இப்போது நடிகர் வடிவேலு பாணியைப் பின்பற்றி திமுக.,வுக்காக களம் இறங்கக் காத்திருக்கிறார்.

கடந்த வாரம் சென்னைக்கு பாரதப் பிரதமர் மோடி வந்திருந்த போது, வழக்கம் போல் திமுக., ‘கோ பேக் மோடி’ எனும் ஹேஷ்டேக் போட்டு டிவிட்டரில் பதிவிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில், தனது டிவிட்டர் பதிவிலும் சின்னதாக ஒரு பதிவு செய்தார் ஓவியா. கோபேக்மோடி என்று, அவர் கொடுத்த டிவிட்டர் குரல் திமுக., பிரசாரத்துக்கான அச்சாரமாகக் கருதப் பட்டது. அரசியல் பக்கம் சாயாமல் இதுவரை இருந்து வந்த ஓவியா, இப்போது திமுக.,வுக்காக பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளார். அவரை இப்போது திமுக., வளைத்துப் பிடித்துள்ளது.

திமுக.,வுக்காக களம் இறங்கும் ஓவியா நடித்த முதல் படம் ‘களவாணி’. தமிழகத்தில் திராவிட இயக்கப் பிரசாரத்துக்காக திமுக., தேர்வு செய்திருக்கும் நடிகை ஓவியா, கேரளத்தைச் சேர்ந்தவர்.

சினிமாவில் புகழ் கிடைக்காத நிலையில், தனியார் டிவி.,யில் கமல்ஹாசன் நடிப்பில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ தொடரில் செண்டிமெண்ட் டச் கொடுத்து நடித்து, ரசிகர்களிடம் புகழ்பெற்றார் ஓவியா. அதன் மூலம் பின்னர் திரையுலகில் பெரிதாக சாதித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு சில படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் அடுத்து அரசியல்களம் தான் என்று கணித்து, சின்னதாக ஒரு டிவீட் போட்டார். அது இப்போது நல்ல பலனைத் தந்திருக்கிறது. ஓவியா பதிவு செய்த டிவிட்டுக்கு எதிர்ப்பு பலமாகக் கிளம்பியது. ஆனால் திமுக.,வினர் அவருக்காக ஆதரவுப் பிரசாரம் செய்ய, இப்போது சட்டமன்றத் தேர்தலில் பிரசாரத்துக்காக களம் இறக்க முடிவு செய்திருக்கிறார் திமுக.,வுக்காக ஒப்பந்தம் போடப்பட்டு பிரசார உத்திகளை வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோர்.

oviya-tweet
oviya-tweet

ஓவியாவை ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் பி.கே.யின் ஐபேக் டீம் பிரசாரக் களத்துக்கு இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் வெளிச்சம் பட்டு விட்டதால், சினிமா வெளிச்சம் இனி இருக்காது என்றும், இதுவே ஓவியாவின் திரையுலகப் பயணத்தின் கடைசி ஆண்டாக இருக்கும் என்றும் கருத்துப் பதிவுகளை செய்து வருகின்றனர் சமூகத் தளங்களில்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories