மலையாளத்தில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி காமெடியர்களில் ஒருவராக திகழ்பவர் ஹரிஸ்ரீ அசோக். இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, திலீப், குஞ்சாக்கோ போபன், பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஷிபு சேகர், ரஷீத் ஆகிய இருவர் இயக்கும் ‘அஞ்சேல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இது பற்றி கூறும்போது:
காமெடியன் என்றால் காமெடி மட்டும்தான் வரும் என்று நினைத்துவிடக்கூடாது. ஒரு நடிகன் என்றால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் திறமை வேண்டும்.
தமிழ் படத்தில் நடிப்பது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். தமிழ் சினிமாவை பார்த்து நான் மிகவும் வியந்திருக்கிறேன். ஆக்ஷன், செண்டிமென்ட், காதல் என எந்த படமென்றாலும், தமிழ் சினிமாவில் திறமையாக எடுக்கிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த ‘காக்கா முட்டை’ படத்தை பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன். தேசிய விருதுக்கு தகுதியான, சரியான படத்தைதான் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் அழுத்தமானது. ‘காக்காமுட்டை’ படத்தை என் நெஞ்சில் பச்சை குத்தியதுபோல் பதிய வைத்திருக்கிறேன். ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குனரை நான் பார்த்தால், அவர் காலைத் தொட்டுக் கும்பிடுவேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
‘அஞ்சேல்’ படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சுமன், கலாபவன் மணி உள்ளிட்ட நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


