விஜய்காந்த்தை நடிக்க சொல்லி வற்புறுத்தினது யாரு?

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்கிற புதிய படத்திலும் விஜயகாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் அருண் பொன்னம்பலம் இயக்கவிருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஜயகாந்த், சண்முகபாண்டியன், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

இதில், சண்முகபாண்டியன் பேசும்போது, என்னுடைய அடுத்த படத்துக்காக 50-60 கதைகளை கேட்டேன். இறுதியில் ‘தமிழன் என்று சொல்’ படத்தின் கதை பிடித்துப் போனதும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார்.

இயக்குநர் அருண் பொன்னம்பலம் பேசும்போது, ”முதலில் நான் விஜயகாந்தை சந்தித்து பேசுவதற்கு மிகவும் பயந்தேன். ஆனால், அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதும் மிகவும் சந்தோஷமடைந்தேன் ”என்றார்.

விஜயகாந்த் பேசும்போது, ”இந்தப் படத்தின் கதையை முதலில் எனது மகன் பிரபாகரன்தான் கேட்டார். அவர் என்னிடம் வந்து இந்த கதையில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். பிறகு, கதையை கேட்டேன், நன்றாக இருந்தது.

இருப்பினும், அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? என தயக்கமாக இருந்தது. எனது மகன்கள், மனைவி ஆகியோர் தொடர்ந்து என்னை நடிக்க வலியுறுத்தவே, இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் ”என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories