விஜய்காந்த்தை நடிக்க சொல்லி வற்புறுத்தினது யாரு?

Published:

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்கிற புதிய படத்திலும் விஜயகாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் அருண் பொன்னம்பலம் இயக்கவிருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஜயகாந்த், சண்முகபாண்டியன், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

இதில், சண்முகபாண்டியன் பேசும்போது, என்னுடைய அடுத்த படத்துக்காக 50-60 கதைகளை கேட்டேன். இறுதியில் ‘தமிழன் என்று சொல்’ படத்தின் கதை பிடித்துப் போனதும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார்.

இயக்குநர் அருண் பொன்னம்பலம் பேசும்போது, ”முதலில் நான் விஜயகாந்தை சந்தித்து பேசுவதற்கு மிகவும் பயந்தேன். ஆனால், அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதும் மிகவும் சந்தோஷமடைந்தேன் ”என்றார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

விஜயகாந்த் பேசும்போது, ”இந்தப் படத்தின் கதையை முதலில் எனது மகன் பிரபாகரன்தான் கேட்டார். அவர் என்னிடம் வந்து இந்த கதையில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். பிறகு, கதையை கேட்டேன், நன்றாக இருந்தது.

இருப்பினும், அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? என தயக்கமாக இருந்தது. எனது மகன்கள், மனைவி ஆகியோர் தொடர்ந்து என்னை நடிக்க வலியுறுத்தவே, இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் ”என்று கூறினார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img