13 வருடங்களுக்குப் பிறகு… அரிதாரம் பூசும் லேடி சூப்பர் ஸ்டார்!

Published:

vijayasanthi - 2026

13 வருடங்களுக்குப் பிறகு அரிதாரம் பூசுகிறார் விஜயசாந்தி! ஆனாலும் அவர், மாறவே இல்லை என்று புகழாரம் சூட்டுகிறார் இயக்குனர் அனில் ராவிபூடி.!

லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி முகத்திற்கு மீண்டும் மேக்கப் போட்டுள்ளார். மகேஷ்பாபுவின் ஷூட்டிங்கில் பங்கு பெறுகிறார் .இந்த செய்தியை இயக்குனர் அனில் ராவிபூடி வெளியிட்டுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டாராக தெலுங்கு ரசிகர்களின் இதயங்களில் மறையாத முத்திரை பதித்துக் கொண்ட நடிகை விஜயசாந்தி ஒருபுறம் ஹீரோயினாக ஸ்டார் ஹீரோக்களின் ஜோடியாக நடித்த படியே மறுபுறம் பவர்ஃபுல் மகளிர் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களிலும் நடித்தார்.

விஜய் சாந்தி இறுதியாக ‘நாயுடம்மா’ சினிமாவில் நடித்தார். 2006 இல் இந்த படம் வெளிவந்தது. அதன்பின் விஜயசாந்தி தன் நேரம் முழுவதையும் அரசியலுக்கே ஒதுக்கினார். எம்பியாக பணியாற்றினார்.

இத்தனை நாட்களாக மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட விஜயசாந்தி மீண்டும் வெள்ளித்திரையில் தென்படுகிறார். சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்கு விஜயசாந்தி ஒப்புக்கொண்டார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் நடிக்கும் செய்தியை இந்தப் படத்தின் தொடக்க விழாவில் இயக்குனர் அனில்ராவிபூடி தெரிவித்தார் .

அவர் திங்கள் கிழமை நேற்று தனது ட்விட்டரில், “விஜயசாந்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேக்கப் போட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளில் அவரிடம் எந்த மாற்றமும் வரவில்லை. அதே டிசிப்ளின் அதே நன்னடத்தை அதை dynamism. விஜயசாந்தி அவர்களை வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறு இருக்க ‘சரிலேது நீகெவ்வரு’ ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெறுகிறது. மகேஷ்பாபுவோடு ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார் . தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img