சர்தார் -விமர்சனம்..

images 56 - 2026

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். முதல் படத்தில் வங்கி மற்றும் சைபர் கிரைம் பற்றி பேசிய இயக்குனர் 2வது படத்தில் கல்விக்கான அவசியத்தை பேசி இருந்தார்.இந்த ‘சர்தார்’ படத்தில் தண்ணீருக்கான அவசியத்தை பேசி இருக்கிறார்.இந்திய உளவுத் துறையின் உளவாளியாக நடித்திருக்கிறார் கார்த்தி.

கதைப்படி…ஒரே நாடு, ஒரே குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது ஒரு தனியார் நிறுவனம்..

இயற்கையில் கிடைக்கும் தண்ணீர் முழுக்கத் தனியார்மயமானால்… அதற்கும் விலை வைக்கப்பட்டால் என்னென்ன பிரச்சினைகளை இந்த நாடு சந்திக்கும்.? என்பதே படத்தின் கதை.

கார்த்தி இதற்கு முன் சிறுத்தை உள்ளிட்ட படங்களில் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது.

இந்த படத்தில் வயதானவர் கெட்டப் இளமையான கெட்டப்.. ஆனால் வயதான கெட்டப்பிலும் இளமையாகவே இருக்கிறார்.முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் இளமையான கார்த்திக் சண்டை போடுவது போலவே உள்ளது. உடல் மொழியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன். ஆனால் மூவருக்கும் பெரிதாக வேலை இல்லை.முனீஸ்காந்த் நடிப்பில் கவர்கிறார். வில்லன் சங்கி பாண்டே ஸ்மார்ட் வில்லன்.

குட்டி பையன் ரித்விக். நல்ல அறிமுகம்.. ஆனால் ப்ளூ பிரிண்ட் பாத்தேன்.. என இவர் சொல்ல சொல்ல கார்த்திக்கு சொல்வது எல்லாம் ரொம்ப ஓவர்.ஒளிப்பதிவில் குறையில்லை கலர்ப்புல்லாகவே இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் பின்னணி இசை தெறிக்க விடுகிறது.. பாடல்கள் சுமார் ரகமே..
முக்கியமாக படத்தின் வசனங்களை ஓவர்டேக் செய்கிறது பின்னணி இசை. இதனால் பல இடங்களில் வசனங்கள் புரியவில்லை.

நாம் தற்போது குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறோம்.. வருடங்கள் செல்ல செல்ல துணி துவைப்பதற்கும் குளிப்பதற்கும் கிடைக்கும் நீரும் முழுக்க முழுக்க வியாபாரம் ஆனால் என்னென்ன பிரச்சனைகளை நாம் சந்திப்போம் என்பதை எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.மேலும் தண்ணீரால் எத்தனை நாடுகளில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது? என்பதையும் சொல்லி இருக்கிறார்.ஆனால் தண்ணீர் வியாபாரத்தை இன்னும் விரிவாக சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் சொல்லி இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.கிளைமாக்ஸ் காட்சிகளில் அதிகப்படியான சினிமாத்தனம் இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

karthi sardar movie releasing on 21st october diwali festival photos pictures stills - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories