பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை!

india cows 1 web - 2026

லண்டன் கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பூமியின் காற்று மண்டலத்தின் மேல் பகுதியில் மிதக்கும் வாயுக்கள் மற்றும் துகள்களின் அடர்த்தி அதிகரித்தால், சூரியக் கதிர்கள் பூமி மீது படுவதால் உண்டாகும் வெப்பம் வெளியேறாமல், காற்று மண்டலத்தின் கீழ் பகுதியிலேயே தங்கிவிடும். இதைத்தான் ‘பசுமை இல்ல விளைவு’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

பசுமை இல்ல விளைவால் பூமி வேகமாக சூடேறும். இதனால் தான் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இந்த ‘பசுமை இல்ல வாயு’ வில் 14.5 விழுக்காடு பால்தரும் மாடுகள் உமிழும் மீத்தேனால் தான் உருவாகிறது என்பதை பருவநிலை மாற்றத்திற்கான குழு அறிக்கை குறிப்பிடுகிறது.

நான் தொடர்ந்து பால் தரும் மாடுகள் உமிழும் மீத்தேன் வாயுவால் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.ஆனால், தொடர்ந்து என்னை கேலி செய்தும் பல தமிழ் ஆர்வலர்கள் (?), வித்தகர்கள் (?) விமர்சித்து கொண்டிருப்பது குறித்து நான் கவலைப்படவில்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நெறியாளர் ஒருவர் கூட இது குறித்து என்னை அலட்சியப்படுத்தி பேசியபோது கூட அவரின் அறியாமையை நினைத்து தான் வருந்தினேன். பாஜக அரசு, மிருகவதை தடுப்பு (கால் நடை சந்தைகளை) ஒழுங்குபடுத்துதல் விதிகள் 2017 ஐ கொண்டுவந்ததே பருவநிலை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கத்தான்.

ஆனால் சில எதிர்க்கட்சிகளும், முற்போக்கு அடைமொழி சூட்டிக்கொள்கிற சமூக ஆர்வலர்களும் ‘மாட்டு கறிக்கு தடை செய்கிறது மோடி அரசு’, ‘என் உணவு என் விருப்பும்’ என்றெல்லாம் பேசி மக்களை சாதி, மத ரீதியாக தூண்டிவிட்டு குளிர் காய்ந்தனர். இன்னும் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர்.

பருவநிலை மாற்றம் எனப்து மனித இனத்துக்கு மிக பெரிய சவால். அதை எதிர்கொள்வதில் பாஜக அரசு மிக சிறப்பாக பணியாற்றுகிறது. எதிர் கட்சிகள், அதை பாராட்ட மனமில்லாமல் போவதை கூட புறந்தள்ளி விடலாம்.

ஆனால், அதை சாதி ரீதியாக, மதரீதியாக விமர்சனம் செய்து நாட்டை, மக்களை அழிவு பாதைக்கு இட்டு செல்வதை அனுமதிக்க முடியாது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தை சமாளிக்க இந்தியா உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தி, அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்ட பாரம்பரிய கலையான யோகாவை, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும், முற்போக்கு அடைமொழி சூட்டி கொண்டவர்களும் எதிர்த்தது, எதிர்ப்பது சுயநல மலிவு அரசியல் தானே?

லண்டனில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாட்டுக்கறி தடை குறித்து தமிழக அரசியல்வாதிகளும், முற்போக்குகளும் (?) என்ன சொல்லப் போகிறார்கள்? இனியாவது திருந்தி, வருந்தி, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் கேடுகளை தடுக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தடை போடாமல், ஒத்துழைப்பார்களா? மக்கள் நலனில் அக்கறை செலுத்து வார்களா? அல்லது தங்களின் குறுகிய அரசியல் நலனிற்காக மக்களை துன்புறுத்துவார்களா?

காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.

  • நாராயணன் திருப்பதி. (பாஜக., பிரமுகர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

Topics

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

Entertainment News

Popular Categories