December 6, 2025, 9:10 AM
26.8 C
Chennai

பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை!

india cows 1 web - 2025

லண்டன் கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பூமியின் காற்று மண்டலத்தின் மேல் பகுதியில் மிதக்கும் வாயுக்கள் மற்றும் துகள்களின் அடர்த்தி அதிகரித்தால், சூரியக் கதிர்கள் பூமி மீது படுவதால் உண்டாகும் வெப்பம் வெளியேறாமல், காற்று மண்டலத்தின் கீழ் பகுதியிலேயே தங்கிவிடும். இதைத்தான் ‘பசுமை இல்ல விளைவு’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

பசுமை இல்ல விளைவால் பூமி வேகமாக சூடேறும். இதனால் தான் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இந்த ‘பசுமை இல்ல வாயு’ வில் 14.5 விழுக்காடு பால்தரும் மாடுகள் உமிழும் மீத்தேனால் தான் உருவாகிறது என்பதை பருவநிலை மாற்றத்திற்கான குழு அறிக்கை குறிப்பிடுகிறது.

நான் தொடர்ந்து பால் தரும் மாடுகள் உமிழும் மீத்தேன் வாயுவால் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.ஆனால், தொடர்ந்து என்னை கேலி செய்தும் பல தமிழ் ஆர்வலர்கள் (?), வித்தகர்கள் (?) விமர்சித்து கொண்டிருப்பது குறித்து நான் கவலைப்படவில்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நெறியாளர் ஒருவர் கூட இது குறித்து என்னை அலட்சியப்படுத்தி பேசியபோது கூட அவரின் அறியாமையை நினைத்து தான் வருந்தினேன். பாஜக அரசு, மிருகவதை தடுப்பு (கால் நடை சந்தைகளை) ஒழுங்குபடுத்துதல் விதிகள் 2017 ஐ கொண்டுவந்ததே பருவநிலை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கத்தான்.

ஆனால் சில எதிர்க்கட்சிகளும், முற்போக்கு அடைமொழி சூட்டிக்கொள்கிற சமூக ஆர்வலர்களும் ‘மாட்டு கறிக்கு தடை செய்கிறது மோடி அரசு’, ‘என் உணவு என் விருப்பும்’ என்றெல்லாம் பேசி மக்களை சாதி, மத ரீதியாக தூண்டிவிட்டு குளிர் காய்ந்தனர். இன்னும் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர்.

பருவநிலை மாற்றம் எனப்து மனித இனத்துக்கு மிக பெரிய சவால். அதை எதிர்கொள்வதில் பாஜக அரசு மிக சிறப்பாக பணியாற்றுகிறது. எதிர் கட்சிகள், அதை பாராட்ட மனமில்லாமல் போவதை கூட புறந்தள்ளி விடலாம்.

ஆனால், அதை சாதி ரீதியாக, மதரீதியாக விமர்சனம் செய்து நாட்டை, மக்களை அழிவு பாதைக்கு இட்டு செல்வதை அனுமதிக்க முடியாது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தை சமாளிக்க இந்தியா உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தி, அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்ட பாரம்பரிய கலையான யோகாவை, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும், முற்போக்கு அடைமொழி சூட்டி கொண்டவர்களும் எதிர்த்தது, எதிர்ப்பது சுயநல மலிவு அரசியல் தானே?

லண்டனில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாட்டுக்கறி தடை குறித்து தமிழக அரசியல்வாதிகளும், முற்போக்குகளும் (?) என்ன சொல்லப் போகிறார்கள்? இனியாவது திருந்தி, வருந்தி, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் கேடுகளை தடுக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தடை போடாமல், ஒத்துழைப்பார்களா? மக்கள் நலனில் அக்கறை செலுத்து வார்களா? அல்லது தங்களின் குறுகிய அரசியல் நலனிற்காக மக்களை துன்புறுத்துவார்களா?

காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.

  • நாராயணன் திருப்பதி. (பாஜக., பிரமுகர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories