December 6, 2025, 10:04 AM
26.8 C
Chennai

அத்திவரதரை தரிசிச்சாச்சு.. இனி அடுத்து…?! இதான்… வாங்க வாங்க…!

kanchipuram athivarathar electircshock - 2025

அத்திவரதரை தரிசித்து முடிச்சாச்சு.. இனி அடுத்து…?! இதைத்தான் செய்ய வேண்டும் வாங்க வாங்க என்று அழைக்கிறார்கள் காஞ்சிபுரத்துக்கு!

கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது அத்திவரதர் வைபவம். 40 ஆண்டுகளுக்கு பின்னர் 48 நாட்கள் அன்பர்களுக்கு காட்சி தர இந்த வருடம் அனந்த சரஸ் திருக்குளத்தில் அனந்த சயனத்தில் இருந்து மீண்டு திருக்கோயிலில் எழுந்தருளினார் அத்திவரதர் பெருமாள்.

இன்றுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவுற்றது. இனி 40 வருடம் கழித்து தான் அவர் மீண்டும் திருக்குளத்தில் இருந்து திருக்கோயிலுக்கு எழுந்தருளப் போகிறார்.

இதனால் ஆர்வ மிகுதியாலும், பக்திப் பெருக்காலும் எண்ணற்ற பக்தர்கள் அத்திவரதர் பெருமானை தரிசித்து மகிழ்ந்தனர். ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடக்கத்தில் சராசரியாக ஒரு நாளுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தது அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும்!

எனவே முன்னேற்பாடுகளில் பெரிதும் கவனம் செலுத்தாமல், சாதாரண நிலையிலேயே இருந்தது மாவட்ட நிர்வாகம். ஆனால் தொடங்கிய நாள் முதல் லட்சக்கணக்கில் அன்பர்கள் கூடுவதைக் கண்டு, மாவட்ட நிர்வாகம் செயலிழந்து நின்றது.

அத்தனைபேருக்கு தேவையான தங்குமிடம், கழிப்பிட வசதி, கார் நிறுத்துமிடம், தண்ணீர் வசதி என அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப் படாததால், பக்தர்களை அவதிக்குள்ளாக்கி பெரும் அவப்பெயரைப் பெற்றது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம்.

இத்தனை பேரின் வருகையால், காஞ்சி நகரமும் குப்பைகள் நிறைந்து, துர்நாற்றம் கொண்டதாக மாறிவிட்டது. இப்போது நகரத்தை தூய்மைப் படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது.

இந்நிலையில், இந்து இயக்கங்கள், தன்னார்வலர்கள் என நாளை ஞாயிறு மற்றும் அடுத்த நாட்களில் காஞ்சிபுரம் நகரைத் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட வுள்ளனர். தொண்டர்களை இந்து முன்னணி சார்பில் அழைத்துள்ளனர்.

#இந்துமுன்னணி சார்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் 12 வரை #அத்திவரதர் தரிசனம் கொடுத்த இடத்தின் வடபகுதியை #தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது . இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன் ஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு பொன்னையா அவர்களும் நிகழ்ச்சியை துவக்கி வைக்க உள்ளார்கள்.
இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டு ஒன்றரை கோடி மக்கள் பாதம் பட்ட இடங்களை தூய்மைப்படுத்தி அத்திவரதர் தரிசனம் செய்த அந்த புண்ணியத்தை பெறுவோம் வாரீர் .
தொடர்புக்கு- 9841305887 இன்று இரவே வருபவர்களுக்கு தங்கும் வசதி, காலை, மதிய உணவு ஏற்பாடுகள் உண்டு. ..  என்று அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories