அத்திவரதரை தரிசிச்சாச்சு.. இனி அடுத்து…?! இதான்… வாங்க வாங்க…!

kanchipuram athivarathar electircshock - 2026

அத்திவரதரை தரிசித்து முடிச்சாச்சு.. இனி அடுத்து…?! இதைத்தான் செய்ய வேண்டும் வாங்க வாங்க என்று அழைக்கிறார்கள் காஞ்சிபுரத்துக்கு!

கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது அத்திவரதர் வைபவம். 40 ஆண்டுகளுக்கு பின்னர் 48 நாட்கள் அன்பர்களுக்கு காட்சி தர இந்த வருடம் அனந்த சரஸ் திருக்குளத்தில் அனந்த சயனத்தில் இருந்து மீண்டு திருக்கோயிலில் எழுந்தருளினார் அத்திவரதர் பெருமாள்.

இன்றுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவுற்றது. இனி 40 வருடம் கழித்து தான் அவர் மீண்டும் திருக்குளத்தில் இருந்து திருக்கோயிலுக்கு எழுந்தருளப் போகிறார்.

இதனால் ஆர்வ மிகுதியாலும், பக்திப் பெருக்காலும் எண்ணற்ற பக்தர்கள் அத்திவரதர் பெருமானை தரிசித்து மகிழ்ந்தனர். ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடக்கத்தில் சராசரியாக ஒரு நாளுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தது அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும்!

எனவே முன்னேற்பாடுகளில் பெரிதும் கவனம் செலுத்தாமல், சாதாரண நிலையிலேயே இருந்தது மாவட்ட நிர்வாகம். ஆனால் தொடங்கிய நாள் முதல் லட்சக்கணக்கில் அன்பர்கள் கூடுவதைக் கண்டு, மாவட்ட நிர்வாகம் செயலிழந்து நின்றது.

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

அத்தனைபேருக்கு தேவையான தங்குமிடம், கழிப்பிட வசதி, கார் நிறுத்துமிடம், தண்ணீர் வசதி என அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப் படாததால், பக்தர்களை அவதிக்குள்ளாக்கி பெரும் அவப்பெயரைப் பெற்றது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம்.

இத்தனை பேரின் வருகையால், காஞ்சி நகரமும் குப்பைகள் நிறைந்து, துர்நாற்றம் கொண்டதாக மாறிவிட்டது. இப்போது நகரத்தை தூய்மைப் படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது.

இந்நிலையில், இந்து இயக்கங்கள், தன்னார்வலர்கள் என நாளை ஞாயிறு மற்றும் அடுத்த நாட்களில் காஞ்சிபுரம் நகரைத் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட வுள்ளனர். தொண்டர்களை இந்து முன்னணி சார்பில் அழைத்துள்ளனர்.

#இந்துமுன்னணி சார்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் 12 வரை #அத்திவரதர் தரிசனம் கொடுத்த இடத்தின் வடபகுதியை #தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது . இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன் ஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு பொன்னையா அவர்களும் நிகழ்ச்சியை துவக்கி வைக்க உள்ளார்கள்.
இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டு ஒன்றரை கோடி மக்கள் பாதம் பட்ட இடங்களை தூய்மைப்படுத்தி அத்திவரதர் தரிசனம் செய்த அந்த புண்ணியத்தை பெறுவோம் வாரீர் .
தொடர்புக்கு- 9841305887 இன்று இரவே வருபவர்களுக்கு தங்கும் வசதி, காலை, மதிய உணவு ஏற்பாடுகள் உண்டு. ..  என்று அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories