December 6, 2025, 10:50 AM
26.8 C
Chennai

விநாயகர் சிலைகள் வைக்க… சென்ற வருடம் போல் கெடுபிடிகளா?! காவல்துறை என்ன சொல்கிறது?!

vinayakar1 - 2025

கடந்த வருடம் போல் இந்த வருடமும் கெடுபிடிகளை வைக்குமா காவல்துறை என்ற கேள்வி இந்து இயக்கங்களுக்கு இடையே எழுந்தது. ஆனால், விநாயகர் சிலை வைப்பதற்கான கட்டுப்பாடுகளை காவல்துறை எளிமைப்படுத்தியிருப்பதாகக் கூறுகின்றனர்.

கடந்த வருடம், எப்போதும் இல்லாத வகையில் கடுமையான விதிகளைப் போட்டது தமிழக அரசு. நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவாகின. அதன்படி, பல்வேறு கட்ட அனுமதிகள், பல துறைகளிடம் இருந்து தடையில்லாச் சான்று, குறிப்பாக தீயணைப்புத் துறையிடம் இருந்தும் இத்தகைய சான்று பெறல் என ஒரு விநாயகர் சிலையை வைப்பதற்குள் அந்தப் பகுதி இந்து இயக்கத்தினர் பட்ட பாடு பெரும்பாடாகத்தான் இருந்தது. அவ்வளவு கெடுபிடிகள்!

ஆனால் இந்த முறை, விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பவர்களுக்கு அனுமதி வழங்க ஒற்றைச்சாளர முறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது என்கின்றனர் காவல் துறையினர்.

சிலை வைக்க விரும்புவர்கள் இனி தனித்தனியாக ஒவ்வொரு துறையிடமும் சென்று அனுமதி வாங்க தேவையில்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

vinayaka chaturti - 2025சென்னையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும் பொறுப்பு அதிகாரியாக ஒருவரை நியமனம் செய்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் 12 காவல் மாவட்டங்களுக்கும் 12 காவல் அதிகாரிகளை பொறுப்பு அதிகாரிகளாக மாநகர காவல்துறை நியமித்துள்ளது.

எனவே இந்த வருடம், கடந்த காலத்தைப் போல் தேவையற்ற கெடுபிடிகள் விதிக்கப் பட மாட்டாது என்று இந்து இயக்கங்கள், விநாயகர் சிலை கமிட்டிகளைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories