காலத்தை வென்று நிற்கும் சாலையோர கல் மண்டபங்கள்!

stone mandapa - 2026

மதுரை – ஸ்ரீவில்லிப்புத்தூர் – ராஜபாளையம் – தென்காசி சாலை, மதுரை – விருதுநகர் – கோவில்பட்டி – திருநெல்வேலி நெடுஞ்சாலை, மதுரை – அருப்புக்கோட்டை – எட்டையபுரம் – தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை, மதுரை – இராமநாதபுரம் – இராமேஸ்வரம் சாலை, மதுரை – தேனி சாலை, மற்றும் மதுரை – மேலூர் சாலையோரத்தில் ;இந்த படத்தில் உள்ளது போல கல்மண்டபங்களை காணலாம் .

அந்தக் காலத்தில், பாண்டிய மன்னாரகளால் நடந்து நெடுந்தூரம் பயணம் செய்பவர்களுக்காக இவை யாவும் கட்டப்பட்டன. இந்த கல்மண்டபத்தில் உணவு, தண்ணீர் ஆகியன வழங்கப்படும். மேலும் மக்கள் ஓய்வெடுக்கவும், யாருக்கேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் வழங்கக்கூடிய கேந்திரங்களாகவும் இது இருந்தன.

இப்படி,13வது நூற்றாண்டுகளில் கட்டமைக்கப்பட்டு துவங்க பட்டன. எவ்வித சேதாரமில்லாமல் இன்று வரை இவை வலுவாக இருக்கிறது. ஆனால் முறையான பராமரிப்பில்லாமல் இந்த மண்டபங்களை பயன்படுத்த முடியாதவாறு செடிகள், மரங்கள் என வளர்ந்துள்ளன. இந்த நெடுஞ்சாலைகளில் கணக்கெடுத்துப் பார்த்தால் இதுபோல சுமார் 100 மண்டபங்களுக்கு மேல் இருக்கும். மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இத்தகைய மண்டபங்கள் அதிகமாக கட்டப்பட்டதாக செய்திகள் உண்டு.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னர் மற்றும் இராணி மங்கம்மாள் தங்களின் தனிப்பார்வையில் இந்த மண்டபங்களை கட்டியதாகவும் வரலாற்றுச் செய்திகள். இந்த மண்டபங்களில் சித்தர்கள் இருந்ததாகவும் ஓர் நம்பிக்கை. அக்காலத்திலேயே தொலைநோக்குப் பார்வையோடு கட்டப்பட்டுள்ள இந்த மண்டபங்கள் சேதாரமடைந்துள்ளது நமது கவனக்குறைவால் தான்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

இன்றைக்கு ஒரு வீட்டை கட்டினால் 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்காத நிலையில், வெறும் கற்கலாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட கட்டிடம் பல நூற்றாண்டுகள் கடந்து கம்பீரமாக நம் முன் இருக்கும் இத்தகைய கட்டிடங்களை பாதுகாப்பது நம் கடமை. வரலாற்று அறிஞர் கே.ஏ.நீலகண்டசாஸ்திரி இதை குறித்தான செய்தியை சொல்லியுள்ளார். அந்த சாலைகளில பயணிக்கும்போது இந்த மண்டபங்களின் அவல நிலையை பார்த்தால் வரலாற்றை புறக்கணித்து இழிவுப்படுத்துகிறோமோ என்ற மனவேதனை எழுகின்றது.

#கல்மண்டபங்கள்
#Stone_Choultry
– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-07-2018

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories