விகடன் குழுமத்தின் வன்மம்: தனது பழியை பிறர் மீது சுமத்தும் அநியாயம்!

Published:

பேராசிரியர் ராஜநாயகம் என்பவரின்  கருத்துக் கணிப்பினை, “லயோலா கருத்துக் கணிப்பு” என்று மோசடியாக பிரச்சாரம் செய்தது விகடன் குழுமம். 

இப்போது, அதே விகடன் குழுமத்தினர், மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்தான் ‘லயோலா கருத்துக்கணிப்பு’ என்று சொன்னது போலவும், விகடன் கும்பல் அதனை மறுப்பது போலவும் ‘தலைகீழாக’ செய்தி வெளியிட்டுள்ளனர். 

https%3A 2.bp.blogspot.com - 2026
விகடன் மோசடி டிவிட்டர் செய்தி 23.1.2016
https%3A 4.bp.blogspot.com - 2026
ஜூனியர் விகடன் கேள்வி பதில்

பின்னணி என்ன?

ஜனவரி 23 பகல் 11.30 மணியளவில் இராஜநாயகம் வெளியிட்ட அறிக்கையில் ‘லயோலா’ என்கிற வார்த்தையே இல்லாத நிலையில் – பகல் 12.30 மணிக்கு  ‘லயோலா கருத்து கணிப்பு’ என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டது விகடன். உடனடியாக இதனை விகடன் இணைய தளத்திலும் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, பகல் 1.11 மணியளவில் “லயோலா – கல்லூரி வெளியிடும் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் – சரியாக இருக்குமா?” என்கிற ஒரு கருத்துக் கணிப்பை டிவிட்டரில் வெளியிட்டனர்.

https%3A 4.bp.blogspot.com - 2026
விகடன் மோசடி முகநூல் செய்தி 23.1.2016

https%3A 3.bp.blogspot.com - 2026
விகடன் மோசடி டிவிட்டர் செய்தி 23.1.2016

இதன் மூலம் – தமிழ்நாட்டு மக்களை குழப்பி, “திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு” என லயோலா கல்லூரியே சொன்னதாக நடகமாடியது விகடன். இதுகுறித்து விரிவாக இந்த இணைப்பில் காணலாம்: https://arulgreen.blogspot.com/2016/01/Paid-News-in-Vikatan.html

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

ஜூனியர் விகடனின் புதிய பித்தலாட்டம்

இப்போது “மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்தான் ‘லயோலா கருத்துக்கணிப்பு’ என்று சொன்னது போலவும், அதற்கு அது லயோலா கருத்துக்கணிப்பு அல்ல” என்று விகடன் குழுமம் விளக்கம் அளிப்பதாகவும் – ஜூனியர் விகடனில் ‘கேள்வியும் நானே – பதிலும் நானே’ வெளியிட்டுள்ளனர்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் 23.1.2016 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில்“லயோலா கல்லூரியில் பணியாற்றிய போது மக்கள் ஆய்வகம் என்ற அமைப்பை தொடங்கி கருத்துக் கணிப்புகளை நடத்திவந்த பேராசிரியர் இராஜநாயகம், கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதே அமைப்பின் சார்பில் கருத்துக்கணிப்பு கடைவிரித்து நடத்தி வருகிறார்”என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், ‘லயோலா கருத்துக்கணிப்பு’ என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னதாக அப்பட்டமாக பொய் சொல்கிறது ஜூனியர் விகடன். 

தவறாக செய்தி வெளியிட்ட விகடன் குழுமம் அதற்காக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், விகடன் குழும மோசடியை அம்பலப்படுத்தியவர்கள் மீதே இப்போது பழியைப் போடுகின்றனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

விகடன் குழுமத்துக்கு எதுக்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு?

தொடர்புடைய செய்திகள்:

1. விகடன் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும்: பணத்துக்காக செய்தி வெளியிடுவதை நிறுத்து! 

2. மாணவிகள் தற்கொலை: SVS கல்லூரிக்கு விளம்பரம் செய்த ஜூனியர் விகடனுக்கு என்ன தண்டனை? 

3. ‘விலைபோன’ தி இந்து + விகடன்: விழுப்புரம் SVS கல்லூரி விவகாரத்தில் உண்மையை மறைப்பது ஏன்? 

 

செய்தி பதிவு: https://arulgreen.blogspot.com/2016/02/Vikatan-PaidNews.html

Related articles

Recent articles

spot_img