விகடன் குழுமத்தின் வன்மம்: தனது பழியை பிறர் மீது சுமத்தும் அநியாயம்!

பேராசிரியர் ராஜநாயகம் என்பவரின்  கருத்துக் கணிப்பினை, “லயோலா கருத்துக் கணிப்பு” என்று மோசடியாக பிரச்சாரம் செய்தது விகடன் குழுமம். 

இப்போது, அதே விகடன் குழுமத்தினர், மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்தான் ‘லயோலா கருத்துக்கணிப்பு’ என்று சொன்னது போலவும், விகடன் கும்பல் அதனை மறுப்பது போலவும் ‘தலைகீழாக’ செய்தி வெளியிட்டுள்ளனர். 

https%3A 2.bp.blogspot.com - 2026
விகடன் மோசடி டிவிட்டர் செய்தி 23.1.2016
https%3A 4.bp.blogspot.com - 2026
ஜூனியர் விகடன் கேள்வி பதில்

பின்னணி என்ன?

ஜனவரி 23 பகல் 11.30 மணியளவில் இராஜநாயகம் வெளியிட்ட அறிக்கையில் ‘லயோலா’ என்கிற வார்த்தையே இல்லாத நிலையில் – பகல் 12.30 மணிக்கு  ‘லயோலா கருத்து கணிப்பு’ என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டது விகடன். உடனடியாக இதனை விகடன் இணைய தளத்திலும் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, பகல் 1.11 மணியளவில் “லயோலா – கல்லூரி வெளியிடும் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் – சரியாக இருக்குமா?” என்கிற ஒரு கருத்துக் கணிப்பை டிவிட்டரில் வெளியிட்டனர்.

https%3A 4.bp.blogspot.com - 2026
விகடன் மோசடி முகநூல் செய்தி 23.1.2016

https%3A 3.bp.blogspot.com - 2026
விகடன் மோசடி டிவிட்டர் செய்தி 23.1.2016

இதன் மூலம் – தமிழ்நாட்டு மக்களை குழப்பி, “திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு” என லயோலா கல்லூரியே சொன்னதாக நடகமாடியது விகடன். இதுகுறித்து விரிவாக இந்த இணைப்பில் காணலாம்: https://arulgreen.blogspot.com/2016/01/Paid-News-in-Vikatan.html

ஜூனியர் விகடனின் புதிய பித்தலாட்டம்

இப்போது “மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்தான் ‘லயோலா கருத்துக்கணிப்பு’ என்று சொன்னது போலவும், அதற்கு அது லயோலா கருத்துக்கணிப்பு அல்ல” என்று விகடன் குழுமம் விளக்கம் அளிப்பதாகவும் – ஜூனியர் விகடனில் ‘கேள்வியும் நானே – பதிலும் நானே’ வெளியிட்டுள்ளனர்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் 23.1.2016 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில்“லயோலா கல்லூரியில் பணியாற்றிய போது மக்கள் ஆய்வகம் என்ற அமைப்பை தொடங்கி கருத்துக் கணிப்புகளை நடத்திவந்த பேராசிரியர் இராஜநாயகம், கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதே அமைப்பின் சார்பில் கருத்துக்கணிப்பு கடைவிரித்து நடத்தி வருகிறார்”என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், ‘லயோலா கருத்துக்கணிப்பு’ என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னதாக அப்பட்டமாக பொய் சொல்கிறது ஜூனியர் விகடன். 

தவறாக செய்தி வெளியிட்ட விகடன் குழுமம் அதற்காக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், விகடன் குழும மோசடியை அம்பலப்படுத்தியவர்கள் மீதே இப்போது பழியைப் போடுகின்றனர்.

விகடன் குழுமத்துக்கு எதுக்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு?

தொடர்புடைய செய்திகள்:

1. விகடன் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும்: பணத்துக்காக செய்தி வெளியிடுவதை நிறுத்து! 

2. மாணவிகள் தற்கொலை: SVS கல்லூரிக்கு விளம்பரம் செய்த ஜூனியர் விகடனுக்கு என்ன தண்டனை? 

3. ‘விலைபோன’ தி இந்து + விகடன்: விழுப்புரம் SVS கல்லூரி விவகாரத்தில் உண்மையை மறைப்பது ஏன்? 

 

செய்தி பதிவு: https://arulgreen.blogspot.com/2016/02/Vikatan-PaidNews.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories