லஞ்ச் பாக்ஸ் கார்னர்: குதிரைவாலி அரிசி புலாவ்!

kuthraivali rice Pulao - 2026

குதிரைவாலி அரிசி புலாவ்
தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி – 400 கிராம் (1 பங்கு)
முருங்கை பீன்ஸ் – 100 கிராம்
காரட் – 100 கிராம்
பச்சை பட்டாணி – 50 கிராம்
பட்டர் பீன்ஸ் – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 3 எண்ணம்
தண்ணீர் – 800 மில்லி லிட்டர் (2 பங்கு)
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 3 இதழ்கள் (பெரியது)
மல்லி இலை – 5 கொத்து

தாளிக்க
நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்
பட்டை – சுண்டு விரல் அளவு
கிராம்பு – 3 எண்ணம்
ஏலக்காய் – 3 எண்ணம்
கறிவேப்பிலை – 2 கீற்று
நெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் குதிரைவாலி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் தண்ணீரை வடித்து தனியே குதிரைவாலி அரிசியை எடுத்து வைக்கவும்.
முருங்கை பீன்ஸ், காரட், பெரிய வெங்காயம் ஆகியவற்றை சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக வெட்டவும்.
பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை தோலுரித்துக்கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.
வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினைமையாக அரைத்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
மல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி கீறிக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கால் பாகம் வதங்கியதும் அதனுடன் நறுக்கிய முருங்கை பீன்ஸ், காரட், பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ், கீறிய பச்சை மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் வதங்கியதும் அதனுடன் அரைத்த இஞ்சி, வெள்ளைப் பூண்டு கலவையை சேர்த்து இரு நிமிடங்கள் வதக்கவும்.
பின் அதனுடன் இரண்டு பங்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

ஊற வைத்து வடித்த குதிரைவாலி அரிசி, தேவையான உப்பு, நறுக்கிய கொத்த மல்லி இலை ஆகியவற்றை கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.

தேவையான தண்ணீர், குதிரைவாலி அரிசியைச் சேர்த்ததும்
தேவையான தண்ணீர், குதிரைவாலி அரிசியைச் சேர்த்ததும்
பின்னர் கலவையை ஒரு சேரக் கிளறி குக்கரை மூடி விசில் போடவும்.
அடுப்பினை சிம்மில் வைக்கவும்.
ஐந்து நிமிடங்களில் அடுப்பினை அணைத்து விடவும். விசில் வரத் தேவையில்லை.

குக்கரின் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து புலாவை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான நெய் சேர்த்து ஒரு சேர கிளறவும்.
சுவையான குதிரைவாலி அரிசி புலாவ் தயார்.
இதனுடன் பொரித்த அப்பளம், தயிர் வெங்காயப் பச்சடி சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு
சிறுதானியங்களை சமைக்கும் போது விரைவில் அடிப்பிடித்து விடும். அதனால் சரியான அளவு தண்ணீர் மற்றும் சரியான தீயின் அளவு ஆகியவை மிகவும் அவசியம்.

எனவேதான் குக்கரை மூடி அடுப்பினை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்களில் அடுப்பினை அணைத்து விடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories