லஞ்ச் பாக்ஸ் கார்னர்: குதிரைவாலி அரிசி புலாவ்!

kuthraivali rice Pulao - 2026

குதிரைவாலி அரிசி புலாவ்
தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி – 400 கிராம் (1 பங்கு)
முருங்கை பீன்ஸ் – 100 கிராம்
காரட் – 100 கிராம்
பச்சை பட்டாணி – 50 கிராம்
பட்டர் பீன்ஸ் – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 3 எண்ணம்
தண்ணீர் – 800 மில்லி லிட்டர் (2 பங்கு)
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 3 இதழ்கள் (பெரியது)
மல்லி இலை – 5 கொத்து

தாளிக்க
நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்
பட்டை – சுண்டு விரல் அளவு
கிராம்பு – 3 எண்ணம்
ஏலக்காய் – 3 எண்ணம்
கறிவேப்பிலை – 2 கீற்று
நெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் குதிரைவாலி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் தண்ணீரை வடித்து தனியே குதிரைவாலி அரிசியை எடுத்து வைக்கவும்.
முருங்கை பீன்ஸ், காரட், பெரிய வெங்காயம் ஆகியவற்றை சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக வெட்டவும்.
பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை தோலுரித்துக்கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.
வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினைமையாக அரைத்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
மல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி கீறிக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கால் பாகம் வதங்கியதும் அதனுடன் நறுக்கிய முருங்கை பீன்ஸ், காரட், பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ், கீறிய பச்சை மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் வதங்கியதும் அதனுடன் அரைத்த இஞ்சி, வெள்ளைப் பூண்டு கலவையை சேர்த்து இரு நிமிடங்கள் வதக்கவும்.
பின் அதனுடன் இரண்டு பங்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

ஊற வைத்து வடித்த குதிரைவாலி அரிசி, தேவையான உப்பு, நறுக்கிய கொத்த மல்லி இலை ஆகியவற்றை கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.

தேவையான தண்ணீர், குதிரைவாலி அரிசியைச் சேர்த்ததும்
தேவையான தண்ணீர், குதிரைவாலி அரிசியைச் சேர்த்ததும்
பின்னர் கலவையை ஒரு சேரக் கிளறி குக்கரை மூடி விசில் போடவும்.
அடுப்பினை சிம்மில் வைக்கவும்.
ஐந்து நிமிடங்களில் அடுப்பினை அணைத்து விடவும். விசில் வரத் தேவையில்லை.

குக்கரின் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து புலாவை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான நெய் சேர்த்து ஒரு சேர கிளறவும்.
சுவையான குதிரைவாலி அரிசி புலாவ் தயார்.
இதனுடன் பொரித்த அப்பளம், தயிர் வெங்காயப் பச்சடி சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு
சிறுதானியங்களை சமைக்கும் போது விரைவில் அடிப்பிடித்து விடும். அதனால் சரியான அளவு தண்ணீர் மற்றும் சரியான தீயின் அளவு ஆகியவை மிகவும் அவசியம்.

எனவேதான் குக்கரை மூடி அடுப்பினை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்களில் அடுப்பினை அணைத்து விடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories