இரண்டாவது திருமணத்துக்கு பெண் பார்த்தவரிடம் ரூ.1.35 கோடி நூதன மோசடி

கனடாவில் தொழில் செய்பவருக்கு தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி அவரிடம் ஆன்லைன் மூலம் சுமார் ரூ.1. 35 கோடியை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பச்சையப்பன் கனடாவில் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.சில காரணங்களுக்காக 2-வது திருமணத்துக்கு பச்சையப்பன் பெண் பார்த்து வந்துள்ளார். இதற்காக மேட்ரி மோனியில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார்.மேலும் பச்சையப்பன் விதவைப்பெண் வேண்டும் என்று செய்திருந்த விளம்பரத்தை பார்த்து அவரிடம் பெரம்பூர் வெங்கட்ராமன் தெருவை சேர்ந்த செந்தில் பிரகாஷ் (42) என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர் தனது தங்கை ராஜேஸ்வரிக்கு பெண் பார்த்து வருவதாகவும், அவருக்கு உங்களை மிகவும் பிடித்துள்ளது என்றும் கூறி உள்ளார்.தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.1 கோடியே 35 லட்சத்து 25 ஆயிரத்து 925-ஐ செந்தில் பிரகாஷ் பெற்று மோசடி செய்துள்ளார்.

இந்தநிலையில் கனடாவில் இருந்து சென்னை வந்த பச்சையப்பன் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். அப்போது பச்சையப்பன், செந்தில் பிரகாசுக்கு போன் செய்து தங்கைக்கு பரிசு பொருட்கள் வாங்கி வந்துள்ளதாகவும், அதனை வாங்கி கொள்ள வருமாறும் கூறி உள்ளார்.
உடன் ஓட்டலுக்கு சென்ற செந்தில் பிரகாஷ் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 903 மதிப்பிலான பரிசு பொருட்களை பறித்துக்கொண்டு பச்சையப்பனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி ராயப்பேட்டை போலீசில் பச்சையப்பன் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் செந்தில் பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

images 6 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories