இரண்டாவது திருமணத்துக்கு பெண் பார்த்தவரிடம் ரூ.1.35 கோடி நூதன மோசடி

கனடாவில் தொழில் செய்பவருக்கு தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி அவரிடம் ஆன்லைன் மூலம் சுமார் ரூ.1. 35 கோடியை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பச்சையப்பன் கனடாவில் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.சில காரணங்களுக்காக 2-வது திருமணத்துக்கு பச்சையப்பன் பெண் பார்த்து வந்துள்ளார். இதற்காக மேட்ரி மோனியில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார்.மேலும் பச்சையப்பன் விதவைப்பெண் வேண்டும் என்று செய்திருந்த விளம்பரத்தை பார்த்து அவரிடம் பெரம்பூர் வெங்கட்ராமன் தெருவை சேர்ந்த செந்தில் பிரகாஷ் (42) என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர் தனது தங்கை ராஜேஸ்வரிக்கு பெண் பார்த்து வருவதாகவும், அவருக்கு உங்களை மிகவும் பிடித்துள்ளது என்றும் கூறி உள்ளார்.தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.1 கோடியே 35 லட்சத்து 25 ஆயிரத்து 925-ஐ செந்தில் பிரகாஷ் பெற்று மோசடி செய்துள்ளார்.

இந்தநிலையில் கனடாவில் இருந்து சென்னை வந்த பச்சையப்பன் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். அப்போது பச்சையப்பன், செந்தில் பிரகாசுக்கு போன் செய்து தங்கைக்கு பரிசு பொருட்கள் வாங்கி வந்துள்ளதாகவும், அதனை வாங்கி கொள்ள வருமாறும் கூறி உள்ளார்.
உடன் ஓட்டலுக்கு சென்ற செந்தில் பிரகாஷ் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 903 மதிப்பிலான பரிசு பொருட்களை பறித்துக்கொண்டு பச்சையப்பனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி ராயப்பேட்டை போலீசில் பச்சையப்பன் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் செந்தில் பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

images 6 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Topics

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

Entertainment News

Popular Categories