ஆம்பூரில் தன் மனைவி என நினைத்து அடுத்தவர் மனைவியை வெட்டி கொலை செய்தவர் கைது..

ஆம்பூரில் பிளாட்பாரத்தில் படுத்து துாங்கியவர் தன் மனைவி என நினைத்து அடுத்தவர் மனைவியை வெட்டி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை இந்திராநகரை சேர்ந்தவர் தேவேந்திரன்(50). மாடு வியாபாரி. இவர் மனைவி ரேணுகாம்பாள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த தனலட்சுமி( 35) என்ற விதவையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தேவேந்திரன் தினமும் குடித்து விட்டு வந்ததால் கோபித்துக் கொண்டு தனலட்சுமி ஆம்பூருக்கு வந்து நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் தங்கினார்.இங்கு இவரைப் போல நிறைய அனாதைகள் தங்கியிருந்தனர். நேற்று மாலை ஆம்பூருக்கு வந்த தேவேந்திரன் மனைவியை தேடி கண்டுபிடித்து, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். தனலட்சுமி வர மறுத்து தேவேந்திரனை அடித்து விரட்டிவிட்டார்.ஆத்திரமடைந்த தேவேந்திரன் மனைவியை கொலை செய்யும் நோக்கத்தில் மாடு அறுக்கும் கத்தியை வாங்கிக் கொண்டு ஆம்பூரில் சுற்றிக் கொண்டிருந்தார்.

நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் சக பெண்களுடன் தனலட்சுமி இரவு 10:00 மணிக்கு படுத்து துாங்கினார். இன்று அதிகாலை 1:00 மணிக்கு கத்தியுடன் தேவேந்திரன் அங்கு வந்தார். துாங்கிக் கொண்டிருந்த பெண்களில் தன் மனைவி இருக்கிறாரா என பார்த்தார். பெண்கள் அனைவரும் கொசு கடிக்கு பயந்து முகத்தை மூடி துாங்கிக் கொண்டிருந்தனர்.இதனால் துாங்கிக் கொண்டிருந்த பெண்களில் ஒருவரை தன் மனைவி என நினைத்து கத்தியால் குத்தினார். அந்த பெண் அலறிக்கொண்டு ஓட முயன்ற போது மீண்டும், மீண்டும் கத்தியால் குத்தியதில், சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் இறந்தார்.

அலறல் சத்தம் கேட்டதும் அந்த பெண்ணுக்கு பக்கத்தில் படுத்திருந்த தனலட்சுமி எழுந்தார். தன் மனைவியை பார்த்த தேவேந்திரன் கத்தியால் அவரை சரமாறியாக குத்தினார். படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் தேவேந்திரனை பிடித்து தர்ம அடி கொடுத்து ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஆம்பூர் கம்பிக்கொல்லையை சேர்ந்தவர் நவீத் என்பவர் மனைவி கவுசர்( 27)என தெரிந்தது. ஒரு திருட்டு வழக்கில் கைதான நவீத் வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கவுசரை அங்கிருந்தவர்கள் விரட்டி விட்டதால், ஆம்பூர் நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் அவர் தங்கியிருந்தார். நள்ளிரவு கத்தியுடன் தேவேந்திரன் அங்கு வந்து மனைவியை தேடினார். அங்கிருந்தவர்கள் முகத்தை துணியால் மூடியபடி துாங்கினர். தனலட்சுமி எப்போதும் குறட்டை விட்டு துாங்குவார். அங்கிருந்த பெண் ஒருவர் குறட்டை விட்டு துாங்கினார். அவர் தான் தன் மனைவி தனலட்சுமி என நினைத்து கவுசரை தேவேந்திரன் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். படுகாயமடைந்த தனலட்சுமி வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இச் சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தினர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil News large 3034976 - 2026
49a1d818dddc166cc4c8e40041e65efe - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories