ஆம்பூரில் தன் மனைவி என நினைத்து அடுத்தவர் மனைவியை வெட்டி கொலை செய்தவர் கைது..

ஆம்பூரில் பிளாட்பாரத்தில் படுத்து துாங்கியவர் தன் மனைவி என நினைத்து அடுத்தவர் மனைவியை வெட்டி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை இந்திராநகரை சேர்ந்தவர் தேவேந்திரன்(50). மாடு வியாபாரி. இவர் மனைவி ரேணுகாம்பாள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த தனலட்சுமி( 35) என்ற விதவையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தேவேந்திரன் தினமும் குடித்து விட்டு வந்ததால் கோபித்துக் கொண்டு தனலட்சுமி ஆம்பூருக்கு வந்து நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் தங்கினார்.இங்கு இவரைப் போல நிறைய அனாதைகள் தங்கியிருந்தனர். நேற்று மாலை ஆம்பூருக்கு வந்த தேவேந்திரன் மனைவியை தேடி கண்டுபிடித்து, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். தனலட்சுமி வர மறுத்து தேவேந்திரனை அடித்து விரட்டிவிட்டார்.ஆத்திரமடைந்த தேவேந்திரன் மனைவியை கொலை செய்யும் நோக்கத்தில் மாடு அறுக்கும் கத்தியை வாங்கிக் கொண்டு ஆம்பூரில் சுற்றிக் கொண்டிருந்தார்.

நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் சக பெண்களுடன் தனலட்சுமி இரவு 10:00 மணிக்கு படுத்து துாங்கினார். இன்று அதிகாலை 1:00 மணிக்கு கத்தியுடன் தேவேந்திரன் அங்கு வந்தார். துாங்கிக் கொண்டிருந்த பெண்களில் தன் மனைவி இருக்கிறாரா என பார்த்தார். பெண்கள் அனைவரும் கொசு கடிக்கு பயந்து முகத்தை மூடி துாங்கிக் கொண்டிருந்தனர்.இதனால் துாங்கிக் கொண்டிருந்த பெண்களில் ஒருவரை தன் மனைவி என நினைத்து கத்தியால் குத்தினார். அந்த பெண் அலறிக்கொண்டு ஓட முயன்ற போது மீண்டும், மீண்டும் கத்தியால் குத்தியதில், சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் இறந்தார்.

அலறல் சத்தம் கேட்டதும் அந்த பெண்ணுக்கு பக்கத்தில் படுத்திருந்த தனலட்சுமி எழுந்தார். தன் மனைவியை பார்த்த தேவேந்திரன் கத்தியால் அவரை சரமாறியாக குத்தினார். படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் தேவேந்திரனை பிடித்து தர்ம அடி கொடுத்து ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஆம்பூர் கம்பிக்கொல்லையை சேர்ந்தவர் நவீத் என்பவர் மனைவி கவுசர்( 27)என தெரிந்தது. ஒரு திருட்டு வழக்கில் கைதான நவீத் வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கவுசரை அங்கிருந்தவர்கள் விரட்டி விட்டதால், ஆம்பூர் நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் அவர் தங்கியிருந்தார். நள்ளிரவு கத்தியுடன் தேவேந்திரன் அங்கு வந்து மனைவியை தேடினார். அங்கிருந்தவர்கள் முகத்தை துணியால் மூடியபடி துாங்கினர். தனலட்சுமி எப்போதும் குறட்டை விட்டு துாங்குவார். அங்கிருந்த பெண் ஒருவர் குறட்டை விட்டு துாங்கினார். அவர் தான் தன் மனைவி தனலட்சுமி என நினைத்து கவுசரை தேவேந்திரன் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். படுகாயமடைந்த தனலட்சுமி வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இச் சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தினர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil News large 3034976 - 2026
49a1d818dddc166cc4c8e40041e65efe - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories