சனிக்கிழமை திருடர்கள்! இராமநாதபுரத்தில் கைது !

kaithu e1563169848461 - 2026திருப்புலாணி போலீஸாருக்கு, ராமநாதபுரம் மாவட்டம், திருப்புலாணி, தினைக்குளம், தாமரைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவில் செல்போன், கேமரா லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருள்கள் அதிகளவில் திருடு போவதாகத்  புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

சனிக்கிழமை திருடர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி கேமராவை கிராமங்களின் முக்கிய இடங்களில் வைத்து திருடர்களைப் போலீஸார் தேடி வந்தனர்.labtop1 - 2026

கடந்த சனிக்கிழமை இரவு திருப்புலாணியை அடுத்துள்ள குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள அரிசி மண்டி ஒன்றில் நள்ளிரவில் ஒருவர் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒரு லேப்டாப், 10,000 பணம் ஆகியவற்றைத் திருடியுள்ளார்.

இது அங்கிருந்த  சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து திருப்புலாணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்தபோது சிசிடிவி-யில் பதிவான நபர், இதேபோல் கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவில் திணைகுளம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் திருடியபோது அங்குள்ள சிசிடிவி-யில்  காட்சியில் உள்ள அதே நபர் எனத் தெரியவந்தது.

இதையடுத்து திருடனின் புகைப்படங்களை வைத்து அவனை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட திருடன் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நிற்பதாக தகவல் வந்தது. போலீஸார் அங்கு சென்றனர். கிழக்கரையில் வசித்து வரும் மகேந்திரன் உதவியுடன் திருப்புலாணி சுற்றுவட்டார கிராமங்களில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு மட்டும் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது,

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..
saturday thirudarkal - 2026காவல் துறையினரைக் கண்டதும் திருடர்கள் மூவரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களைத் துரத்தி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சின்னசேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன், அழகன்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன், முசிறியைச் சேர்ந்த லோகநாதன் ஆகிய மூவருக்கும் திருச்சி சிறையில் நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர், கிழக்கரையில் வசித்து வரும் மகேந்திரன் உதவியுடன் திருப்புலாணி சுற்றுவட்டார கிராமங்களில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு மட்டும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் திருட்டின்போது செல்போன், லேப்டாப், கேமரா ஆகியவை மட்டும் குறி வைத்து திருடி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சனிக்கிழமை திருடர்கள் மூவரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories