என்ன..?! தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி படிப்பா? கேட்டவர்களுக்கு அமைச்சர் பாண்டியராஜன் பதில்!

Published:

ma.fa .pandiarajan - 2026

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி கற்றுக் கொடுக்கப் படுவதா என்று கேள்வி கேட்டு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்த இந்தி உட்பட பல மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன! உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி என்பது கட்டாய பாடம் அல்ல; விருப்ப பாடம் தான் என்று பதில் அளித்துள்ளார் அமைச்சர் பாண்டியராஜன்!

மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதற்கு கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், மாணவர்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பிரெஞ்சு மற்றும் இந்தி மொழிகளின் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முதலே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிரெஞ்சு மற்றும் இந்தி பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட மொழிகள் அங்கே படிக்கும் மாணவர்களுக்கு விருப்பப் பாடம்தானே தவிர கட்டாயப் பாடம் இல்லை.

தமிழ் மொழியின் பெருமையை வெளியில் கொண்டு செல்ல பிற மொழிகள் தேவைப் படுகிறது. ஏனெனில் அங்கே பேசும் மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்தி மொழியை கற்றுக் கொண்டால் வட மாநிலங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

அது போல இந்தி பிரசார சபாவில் இருந்து நேரடியாக வந்து பயிற்சி அளிப்பதாகக் கூறுவது தவறு. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்தவே இந்தி உட்பட பல மொழிகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img